Advertisment

தனிக்குடித்தனம் கோரியதால் தகராறு - கணவன் தீக்குளிப்பு - காப்பாற்ற சென்ற மனைவியும் பலி: தவிக்கும் 3 மாத குழந்தை

DEATH

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் மதபோதகராக இருந்தவர் ரிச்சர்ட் பிராண்ட்லின். இவருக்கு வயது 30. இவர் திருப்பூரை அடுத்த அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையத்தைச் சேர்ந்த ஐஸ்யா ஜெர்சி (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பிரசவத்திற்காக ஆட்டையாம்பாளையத்திற்கு சென்ற ஜெர்சி, குழந்தை பிறந்து 3 மாதம் ஆகியும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தார். அங்கு சென்ற ரிச்சர்ட், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், ஆனால் ஜெர்சி தனிக்குடித்தனம் போகலாம் என்று கூறி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரிச்சர்ட் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகவும், அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த ஜெர்சியும் பலத்த தீக்காயம் அடைந்தார். இதனை கண்ட உறவினர்கள் தீயை அணைத்து அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கோவை அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

suside covai fire child wife husband
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe