Skip to main content

‘இறைவனாய் தந்த இறைவியே..’ - மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 husband who builds a temple for his wife

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்கானூர் தக்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள் உள்ளனர். 

 

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்துள்ளார். மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணி வேதனையடைந்து வருகிறார். ஷாஜகான், தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது போல், சுப்பிரமணியும் தன் மனைவிக்காக அவருக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் உருவச்சிலையை நிறுவி கோவில் ஒன்றை சில வாரங்களுக்கு முன் கட்டியுள்ளார். 

 

இறந்தவரை வணங்கி மரியாதை செய்வது தமிழர்கள் பண்பாடு. அதுபோல் தினமும் இவர் மனைவியை வணங்கி வருகிறார். மனைவிக்கு சிலை அமைத்துள்ளார் என்கிற தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர். மனைவி இறந்த சில நாட்களில் துணை தேடும் காலத்தில், வாழும் காலத்தில் மனைவி காட்டிய அன்பை, பாசத்தை மறக்க முடியாமல், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவரும் நிகழ்கால ஷாஜகானாக வாழ்கிறார். வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளில் 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்கவும் சுப்பிரமணி முடிவு செய்துள்ளாராம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.