Skip to main content

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த தங்கராசு எனபவரது மகன் ராமசாமி. இவருக்கும் சின்னசேலம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா - ராதா தம்பதியினரின் மகளான கெளசல்யாவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், ராமசாமி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கௌசல்யா மீது ராமசாமி  உறவினர்கள் தவறான தகவல்கள் கூறியதாகவும், அதனால் சந்தேகமடைந்த அவர் கடந்த 30.9.2018 அன்று வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்தவர், மாடியில் படுத்திருந்த தனது மனைவி கவுசல்யாவை, உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன கௌசல்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கவுசல்யா உயிரிழந்தார்.

 

 Husband sentenced to life imprisonment in cuddalore

 

இதுகுறித்து கௌசல்யாவின் தந்தை செந்தில்ராஜா அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விருத்தாச்சலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில்   குற்றம் சாட்டப்பட்ட ராமசாமி,  குற்றவாளி என்று உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் வழங்கி நீதியரசர் இளவரசன் தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளி ராமசாமியை காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர் .

 

 Husband sentenced to life imprisonment in cuddalore

 

இதேபோல் புதுச்சேரி, சேதுராப்பட்டு அடுத்த கரசூர் மேட்டுத் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பன் (38) என்பவரும், அதே பகுதி மெயின்ரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம்(34) என்பவரும்.நண்பர்கள்.  இருவரும் கடந்த 14.08.2016 அன்று அதே பகுதியில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் குடித்தனர். போதையில் இருந்த அய்யப்பன், ஆறுமுகத்தை ஆபாசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அய்யப்பனை தாக்கினார். அதன்பிறகும் கோபம் தணியாததால், மறுநாள் அதிகாலை அய்யப்பனை தனது வீட்டுக்கு துாக்கிச் சென்று அடைத்து வைத்து, கடப்பா கல்லால் தாக்கி உள்ளார். இதில் அய்யப்பன் உயிரிழந்தார்.

புகாரின் பேரில் சேதுராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி தனபால் கொலை குற்றத்திற்காக ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து, ஆறுமுகம், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.