மனைவியின் மரணத்திற்கு கணவர் காரணம்? உறவினர்கள் போராட்டம்! 

Is the husband responsible for the wife's death? Relatives struggle!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள வல்லியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி சரஸ்வதி(35). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீரப்பன் கருவேப்பிலங்குறிச்சியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். வீரப்பனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 22-ஆம் தேதி மீண்டும் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக யாரும் இல்லாத நேரத்தில் சரஸ்வதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரஸ்வதி உயிரிழந்தார். இதையடுத்து சரஸ்வதி உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சரஸ்வதியின் உறவினர்கள் சரஸ்வதி இறப்புக்கு அவரது கணவர் வீரப்பன் தான் காரணம் என கூறியும், அதனால் வீரப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பிரேதத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe