Husband police complaint missing wife

தூத்துக்குடி - மாதா நகரில்மாரிமுத்து என்பவர் மனைவி அழகு ராணி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்தார். அழகு ராணியின் பேச்சைக்கேட்டுதூத்துக்குடியிலிருந்து சாத்தூர் அருகேயுள்ளவாழவந்தாள்புரத்துக்கு 2019-ல் குடும்பத்துடன் குடியேறினார். இறந்து போனதன் தம்பியைப் போலவே இருக்கிறார் எனச் சொல்லிதூத்துக்குடி - தட்டப்பாறையைச் சேர்ந்த பாண்டியுடன் செல்போனில் அழகு ராணி பேசி வந்திருக்கிறார்.

Advertisment

அழகு ராணியைச் சந்திப்பதற்கு அடிக்கடி சாத்தூர் வீட்டுக்கு வந்து போக இருந்திருக்கிறார் பாண்டி. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் லைன் வீட்டில் வசித்து வரும் தன் கணவரானமாரிமுத்துவிடம், “பாண்டியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறேன்...” என்று கூறியிருக்கிறார் அழகு ராணி. உடனே கோபத்தில் சத்தம்போட்ட மாரிமுத்துதனது மாமனார், மாமியாரிடம் அழகு ராணியின் தவறான நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், பெற்றோர் அறிவுரை கூறியும் கேட்காத அழகு ராணிதனது 5 வயது மகளுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இருவரையும்எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், பாண்டிமீது சந்தேகப்படுவதாகவும்கண்டுபிடித்துத் தரவேண்டியும்அம்மாபட்டி காவல்நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவாகியிருக்கிறது.