Skip to main content

இடையூறாக இருந்ததால் கொலை செய்ய திட்டமிட்டோம் - காதலனுடன் கைதான மனைவி

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
ra



தனது சந்தோஷத்துக்கு கணவன் இடையூறாக இருந்ததால் காதலன் மூலம் அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

வேலூர் அருகே திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார். ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 11-ந் தேதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

 

 


இதனை அறிந்த ராஜ்குமார் மனைவி கவுசல்யா, ராஜ்குமார் தந்தை மகேந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கதறி அழுதனர். இனி இரண்டு பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவேன் என்று கவுசல்யா கதறினார். கொலை சம்பவம் நடந்த அன்று அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிலருடன் ராஜ்குமார் பேசி கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

 

 


இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரமேசை தேடி சென்றனர். அப்போது அவர் தலைமறைவானார். ரமேஷ் நண்பர்களை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுக்கும், கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதனையடுத்து கவுசல்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜ்குமார் பகலில் வேலைக்கு சென்றவுடன், ரமேசுடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதை அவர் ஒப்புக்கொண்டார். 
 

ra

 

தாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், அடிக்கடி போனில் பேசுவதும் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. இதனை தனது கணவர் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் சந்திக்க முடியவில்லை. கணவன் உயிரோடு இருந்தால் ரமேஷை சந்திக்க முடியாது எனவே கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்து ராஜ்குமாரை கொலை செய்து விடுமாறு ரமேஷிடம் கூறியுள்ளார். அதன்படி ரமேஷ் தனது நண்பர்கள் மூலம் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். ராஜ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். கவுசல்யா, ரமேஷ், துளசிராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.