ADVERTISEMENT

அடித்து உதைத்ததில் அலறி துடித்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

06:51 PM Aug 06, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பாபு. இவரது மகன் அல்தாப். அல்தாப் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஜார் தெருவில் பழ வியாபாரம் செய்து வருகிறார். அல்தாப்புக்கு திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்த மாலிக்பாஷா என்பவரின் மகள் நாசியாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஓர் மகன் உள்ளான்.

ADVERTISEMENT

கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ( ஆகஸ்ட் 5 ) இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த அல்தாப் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். அவர் அலறி துடித்துள்ளார். கத்தாதே கத்தாதே எனச்சொல்லியும் வலிதாங்க முடியாமல் கத்தியதால் வீட்டில் இருந்த காய் அறுக்கும் கத்தியை எடுத்து மனைவி நாசியாவின் கழுத்தை அறுத்து கொடுரமாக கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து நாசியாவை மீட்டனர். அதற்குள் இரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் கூடியதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் அல்தாப்.

இதுகுறித்து அத்தெரு மக்கள் திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கூறினர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அல்தாபை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மற்றும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT