/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3264.jpg)
கடலூர் மாவட்டம்விருதாச்சலம்அடுத்த கோ.பவழங்குடிகிராமத்தைச்சேர்ந்த செல்வராஜ்-வாசுகி என்பவரின் மகன்மணிராஜ். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அதேஊரைச்சேர்ந்த மதியழகன் -நிர்மலா ராணிஎன்பவரின் மகள்ஷர்மிளாபானுவைகாதலித்து திருமணம் செய்துள்ளார். காதலித்து திருமணம் செய்து மனைவியுடன் வாழ்ந்து வந்தமணிராஜிக்குஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த நாள் முதல்மணிராஜ்,சர்மிளா பானுமீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடிதகராறில்ஈடுபட்டுவந்ததாகக்கூறப்படுகிறது.தகராறில்ஈடுபடும்போதுசர்மிளா பானுபலமுறை கோபப்பட்டு, தன் தாய்வீட்டிற்குச்செல்வதும், பின்னர் சமாதானம் செய்து வைத்து, கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களும்நடைபெற்றதாகக்கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் சமாதானம் செய்து கணவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை,மணிராஜ்அதிக மதுபோதையில் மீண்டும் தனது காதல் மனைவியுடன்தகராறில்ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது. அப்போது கோபத்தின்உச்சத்துக்குச்சென்றமணிராஜ்,நெஞ்சைப்பதற வைக்கும் வகையில் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டது அக்கிராமத்தையே உலுக்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கக்கூடிய தனது மனைவியின்ஆடைகளைக்களைத்துவிட்டு, அவரின் கை,கால்களைக்கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து, அவரின்பிறப்புறுப்பைச்சிதைத்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அப்பெண், ரத்தவெள்ளத்தில் சுயநினைவு இழந்து வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனைப் பார்த்தமணிராஜின்தாயார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசுமருத்துவமனைக்குக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சிகிச்சை அளிக்க முடியாதுஎனக்கூறியதாகச்சொல்லப்படுகிறது. பின்னர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார்மருத்துவமனைக்குச்சென்றுஅவருக்குச்சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அப்பெண்ணின் பிறப்பு உறுப்பில் 25 தையல்கள் போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கொடுமையான வலியால், தாங்க முடியாத அவதியடைந்து மயக்கம் அடைந்ததால் மீண்டும் அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசுமருத்துவமனைக்குக்கொண்டுசென்றுசிகிச்சைக்காகச்சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையில் புகார்அளிக்கக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியதாகவும், மருத்துவமனையிலிருந்துவீட்டிற்குத்திரும்பிய பின்பே அப்பெண்ணின்பெற்றோர்களுக்குத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்துப்பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டமணிராஜ்தலைமறைவாகிவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)