Skip to main content

கடன் பிரச்சனையால் கணவன் எஸ்கேப்... அப்பாவி மனைவிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையென்றால் என்ன செய்யலாம்? அதற்காக இந்த செந்தில்குமார் செய்ததை போல் செய்யக் கூடாதுங்க என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோட்டு மக்கள். 

ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  செந்தில்குமார். ஸ்பின்னிங் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். செந்தில்குமார்  ஸ்பின்னிங் மில்லை நடத்த சிரமப்பட்டு பணப் பிரச்சனையால் அவருக்கு தெரிந்தவர்களிடம் தொடர்ந்து  கடன் அதிகம் வாங்கியிருந்தார். 

 Husband escape due to debt problem..Pity for the innocent wife!


ஒரு கட்டத்தில் தொழில் நஷ்டம் அடைந்தது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் ஒரு முடிவு செய்து மனைவி மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு  கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு எங்கேயோ சென்றுவிட்டார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? மனைவி சங்கீதாவிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு போன கணவர் திரும்பி வந்து விடுவார் உங்கள் பணத்தை கொடுத்து விடுவோம் என நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். ஆனால் மூன்று வருடம் கழித்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கணவன் வாங்கிய கடன் தொல்லையால் மனைவி சங்கீதா மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து  வந்துள்ளார். 

இந்நிலையில், தொடர் மனவேதனையில் இருந்த சங்கீதா நேற்று வீட்டில் தற்கொலைக்கு முடிவை நாடினார். அவர் வீட்டருகே இருந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்னை மீட்டு ஈரோடு அரசு  ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு  சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தொழில் நடத்த கணவன் வாங்கிய கடன் கணவனை எங்கோ எஸ்கேப்பாக வைத்துவிட்டு அப்பாவி பெண்னின் உயிரை பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.