Skip to main content

வேலைக்கு போகாமல் டிக்டாக், பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் கணவர் தொடர்பு! மனைவி விபரீத முயற்சி...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

டிக்டாக், பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகிய தனது கணவர், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது விரிஞ்சிபாக்கம் கிராமம். இந்த ஊரை சேர்ந்த இளைஞர் செல்லமுத்து. இவரும் வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த யாமினி என்ற இளம்பெண்ணும் புதுச்சேரியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளியில் ஒன்றாக பயிற்சி எடுத்துள்ளனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்தோடு 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.

 

tic tok



இருவரும் கணவர் ஊரான விரிஞ்சிபாக்கம் கிராமத்தில் வசித்து வந்தனர். கணவர் செல்லமுத்துவோ சதா நேரமும் செல்போன் மூலம் டிக் டாக் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மூழ்கி கிடந்துள்ளார். வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் எப்போதும் செல்போனிலேயே காலம் கழித்ததால் மனைவி யாமினி அவ்வப்போது கண்டித்துள்ளார்.
 

இதனால் கோபமான செல்லமுத்து மனைவியை திட்டித் தாக்கியுள்ளார். இதனால் ஒருமுறை யாமினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இதன் பிறகும் செல்லமுத்து சதா எந்த நேரமும் டிக் டாக் மற்றும் பேஸ்புக் என செல்போனிலேய மூழ்கி கிடந்துள்ளார். 
 

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் செல்போனிலேயே நேரத்தை கணவர் வீணாக்குவதை கண்டு கோபமடைந்த யாமினி, அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில் பேஸ்புக் மூலம் ஏராளமான பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அதில் தவறான செய்திகள் படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 


 

 

இதுகுறித்து கணவர் செல்லமுத்துவிடம் கேட்டுள்ளார். அதற்கு செல்லமுத்து, தான் அப்படித்தான் செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று மிரட்டி தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்து கோபமடைந்த யாமினி மீண்டும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த புதுப்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கணவன், மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சமூக ஊடகங்களை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும், தவறான வழியில் பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்சினையில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை வரும். எனவே அவற்றை பொறுப்புடன் கையாள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.