Skip to main content

இன்ஸ்பெக்டரிடமிருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள் - போராடும் கணவர்.!!!

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Husband complains to wife, inspector



"குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் நடந்த பிரச்சனைக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். பஞ்சாயத்துப் பேசுவதாக ஆரம்பித்து இன்ஸ்பெக்டர் என் மனைவியை அபகரித்துக் கொண்டார். ஆகவே, இன்ஸ்பெக்டர் பிடியிலிருக்கும் என்னுடைய மனைவியை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்." என முதல்வர், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. தொடங்கி மாவட்ட எஸ்.பி.வரை புகாரை அனுப்பி உயிர் பயத்துடன் காத்திருக்கின்றார் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர்.
 

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்ற அக்கடிதமோ, "நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள பைப்பொழில் கிராமத்தினை சேர்ந்த எனக்கு, அருகிலுள்ள புளியரை தாட்கோ காலணிப்பகுதியினை சேர்ந்த பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். எங்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நான் பணிபுரியும் பணி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் வசித்து வந்தேன். 
 

கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கும், என்னுடைய மனைவிக்கும் தகராறு வர, ரோட்டில் நின்று வாக்கு வாதம் செய்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த அவசரப் போலீஸ் 100 எங்கள் இருவரையும் கண்டித்ததோடு மட்டுமில்லாமல், காலையில் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறியதால் மறுநாள் நானும் எனது மனைவியும் மேல்மருவத்தூர் காவல் நிலையம் சென்றோம். 
 

அப்பொழுது அங்குப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், எங்கள் இருவரையும் தனித்தனியாக விசாரித்து விட்டு, புறப்படும்போது எனது மனைவியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டும், அவருடைய செல்போனைக் கொடுத்தும் அனுப்பினார். வழக்கம் போல் தான் அடுத்த நாட்களும் கழிந்தன. 

 

Husband complains to wife, inspector


 

இந்நிலையில், தினசரி பல நேரங்களில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பாள். அதனை நான் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் அவளுக்குத் தெரியாமல் அவளுடைய போனை எடுத்துப் பார்க்கும் பொழுது, எங்களுக்கு பஞ்சாயத்துப் பேசிய மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் அவருடைய 94981 05098 மற்றும் 94434 66366 எனும் எண்ணிலிருந்து தொடர்ந்து பேசியது தெரிய வந்தது.
 

எனக்கு உடம்பு சரியில்லை... சுடு தண்ணீர் வைக்க வா... தைலம் தேய்து விட வா... என கொஞ்சும் மொழியில் குறுஞ்செய்திகளையும் அவர் அனுப்பி இருப்பதும் எனக்குத் தெரியவர என்னுடைய மனைவியிடம் இதுப் பற்றி கேட்டேன். இன்ஸ்பெக்டரும், எனது மனைவியும் சேர்ந்து கொண்டு, "பேசாமல் இருக்கனும். இல்லைன்னா ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் எனவும், என்னுடைய வேலையை காலி செய்துவிடுவேன் எனவும் மிரட்டுகின்றனர்.
 

என்னுடைய குழந்தைகாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்து, எனது மனைவியை மீட்டுத்தாருங்கள். தயவு செய்து என்னுடைய பெயரை வெளியிட வேண்டாம். இது தெரிந்தாலே என்னையும், என்னுடைய குழந்தையையும் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து எனது மனைவி கொன்றுவிடுவாள்." என்கிறது அந்தக் கடிதம். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறந்து என்பது தற்பொழுதைய ஹாட் டாபிக்கே..!!
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அலட்சியம் காட்டிய நகராட்சி; பரிதாபமாக பிரிந்த பெண் இன்ஸ்பெக்டரின் உயிர்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Woman inspector passed away due to unidentified speed breaker.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி  சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர். 

இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

Woman inspector passed away due to unidentified speed breaker

இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.

ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.