Husband complains that his wife is missing after going to the bank to pay

ஈரோடு மாவட்டம் பவானி தொட்டியபாளையம் மோளகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ்(31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (27). இவா், தனியார் பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 12ம் தேதி வங்கியில் குழு பணம் செலுத்தி விட்டு வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரமேஷ் பவானி காவக் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் மாயமான சத்யவை தேடி வருகின்றனர்.