Skip to main content

15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது; கணவர் மீது பாய்ந்தது போக்சோ! 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Husband arrested under POCSO Act for marrying 15-year-old girl

 

தர்மபுரி அருகே கட்டாயத் திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, அவளுடைய கணவர் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.     

 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஹெச்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு மகன் கலைஞன் (25). கூலித்தொழிலாளி.  இவருக்கும், எருமியாம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2021ம் ஆண்டு, நவ. 10ம் தேதி திருமணம் நடந்தது.  இந்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவள், கடந்த திங்கள்கிழமை (பிப். 20, 2023) தர்மபுரி அரசு  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.     பதினெட்டு வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே திருமணம் செய்ததோடு, ஒரு குழந்தைக்கும் தாயான விவரங்களை அறிந்த மருத்துவர்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

அதையடுத்து சிறுமியிடம் ஒரு புகாரைப் பெற்று பதிவு செய்துள்ளனர். அந்தப் புகாரில், ''கடந்த 2021ம் ஆண்டு, என் கணவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். கணவருடன் வசித்து வந்த  நிலையில் நான் கர்ப்பம் அடைந்தேன். கடந்த நான்கு மாதமாக என் கணவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது  தெரியாது.  இந்நிலையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கட்டாய திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று  கூறியுள்ளார்.     இந்தப் புகாரின் பேரில் சிறுமியின் கணவர் கலைஞன் மீது போக்சோ சட்டத்தின் கீழும், அவருடைய உறவினர்கள் சின்னதம்பி, காந்தா ஆகியோர்  மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.