Skip to main content

எம்.பி.,யை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018
mp


திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சத்தியபாமாவின் கணவர் வாசுவை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தியபாமாவுக்கும், வாசுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

"மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்"- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்! 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

"Puducherry Government's position should be informed in the context of what the Union Minister has said"- Vaithilingam MP. Emphasis!

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இப்பாடத்திட்டம் அமலானால், தமிழுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல துறைகளைக் குழப்பிவிட்டு, தற்போது கல்வித்துறையையும் குழப்பத் தொடங்கியுள்ளனர். தமிழக பாடத்திட்டம் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் தமிழைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகும். முதலமைச்சர் ரங்கசாமி இவ்விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

 

மின்துறைத் தனியார் மயமாக்க டெண்டர் வெளியீட்டைத் தொடர்ந்து மின்துறையினர் போராட்டம் நடத்தினர். மின்துறையை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் முடிவு, இந்தியாவில் எம்மாநிலத்திலும் இல்லை. இதில் அரசின் நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, மின்துறையின் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான இடங்களை ரூபாய் 1- க்கு வாடகை தர முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் மின்துறை சாதனங்களைக் குறைந்த தொகைக்கு தனியார் பயன்படுத்த அனுமதிக்கவும் டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆளுநர், முதலமைச்சர், துறை அமைச்சர் அனுமதி இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்காது. டெண்டர் யாருக்கு தரவேண்டும் என முடிவு எடுத்துதான் இந்த வழிகாட்டுதல்கள் டெண்டரில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, மதுபான தொழிற்சாலை அனுமதியைத் தொடர்ந்து, மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்திலும் அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மின்துறை தனியார்மயம் தொடர்பான டெண்டரை வாபஸ் பெறாததன் மூலம் மின்துறையினரையும், மக்களையும் அரசு ஏமாற்றுகிறது"  என்று தெரிவித்தார்.


 

Next Story

"5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு"- ஆ.ராசா குற்றச்சாட்டு! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

"Irregularity in 5G spectrum auction"- A. Raza accused!

 

5ஜி ஏலம் தொடர்பாக, டெல்லியில் இன்று (03/08/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வைச் சேர்ந்த நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றிருக்கிறார்.

 

ரூபாய் 5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூபாய் 1.50 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். 

 

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். 2ஜி-யில் ஊழல் எனக் கூறியது பொய் என்பது அம்பலமாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் செய்ததாக சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சில மாதங்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.