Skip to main content

மனைவியை கொடூரமாக துன்புறுத்திய கணவர் கைது! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Husband arrested for incident wife

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள போ.பவழங்குடியைச் சேர்ந்தவர் மணிராஜ். இவர் லாரி ஓட்டுநர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியைச் சந்தேகத்தின் பேரில் மணிராஜ் கடுமையாகத் துன்புறுத்தி வந்துள்ளார். மனமுடைந்த அந்த பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். 

 

இந்த நிலையில், தனது மனைவியின் தாயார் வீட்டிற்குச் சென்ற மணிராஜ், மனைவியைச் சமாதானப்படுத்தி, தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து,  மனைவிக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்திய மணிராஜ், மேலும் அவரின் உடல் முழுவதும் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். 

 

இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்ட அந்த பெண்ணுக்கு விருத்தாசலம் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம், அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மணிராஜ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 


சார்ந்த செய்திகள்