Skip to main content

மனைவியால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்களுக்காக…  வீரமரணம் அடைகிறேன்! இளம் கணவனின் கண்ணீர் மரணம்!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
 trichy district ariyamangalam


 

திருச்சி அரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரபு (வயது 27). காமராஜர் பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாமினி என்பவரோடு திருமணம் நடந்து 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தாமினி கணவரை பிரிந்து குழந்தையுடன் தாய் வீடு சென்று விட்டார்.

 

இந்த நிலையில் வீட்டில் கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரபு தூக்கு மாட்டி தற்கொலை முயன்றுள்ளார். அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

 

இது குறித்து அரியமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரபு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற அறையில் அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதில் அவர் மனைவி மற்றும் குடும்பத்தார் குறித்து பல்வேறு விஷங்களை குறிப்பிட்டுள்ளார்.

 

அதில் குறிப்பாக திருமணம் ஆன சில நாட்களில் இருந்து பெண் வீட்டார் தரப்பில் இருந்து என் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. என் மனைவி தாமினி என்னுடன் எளிமையான வாழ்க்கை வாழ விரும்பவில்லை. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, என் குடும்பத்தாரும் நிம்மதி இழந்து விட்டனர்.

 

 trichy district ariyamangalam  - Husband's letter



குழந்தை பிறந்த 10 நாளில் இருந்து என் மனைவி என்னிடம் இருந்து பிரிந்து விட்டார். என் குழந்தையை பார்க்க சென்றால் காட்ட மறுக்கின்றனர். என் மனைவியின் அத்தை சந்திரா என்னிடம் நாங்கள் 10 பேரும் அரசு வேலையில் இருப்பவர்கள் நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினார். கடந்த 20ம் தேதி சமாதானம் பேசி இருவரையும் வாழ வைக்கிறோம் என்று கூறினார்கள்.

 

அடுத்த நாளே மதியம் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த டூவிலர், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு என் குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டினர். என் குடும்பத்தை காப்பற்ற வேறு வழியில்லாத காரணத்தால் நான் வீரமரணம் அடைகிறேன். நான் கோழை அல்ல.

 

என் குட்டி பையா, அழகே, அன்பே, மகனே, சித்தப்பா, அவ்வா, தாத்தா இருக்காங்க, கவலைப்படாதே! நம்ம குடும்பத்தை காப்பத்த வேற வழி தெரியலடா, டேய் சந்துரு நீயும், உன் பொண்டாட்டியும் தான் அப்பா, அம்மான்னு, சொல்லி வளடா, அவனுக்கு ஏக்கம் வராத அளவுக்கு வளடா, நல்லபடியா பாதுக்கோ, புள்ளைய நேர்மையா வளடா, என் உயிர் நண்பர்களும் என்னை மன்னிச்சிடுங்க, தம்பி சந்துரு சட்டம் தன் கடமையை செய்யும், நம்ப குடும்பத்துக்கு துணையா இருடா !

 

அப்பாவி ஆண்களுக்கு எதிராக பெண் வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக இது சமர்ப்பணம். இதுவே சரித்திரம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

இது குறித்து அரிமங்கலம் போலிசார் தாமினி, தாமினி தந்தை கருணாநிதி, சந்திரா, அமுதா, உதயகுமார், தனலெட்சுமி, ஜோதீஸ்வரன், ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.