
திருச்சி மாவட்டம், அரியாவூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இளையராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதேபோல், நேற்றும் இளையராஜாவுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த இளையராஜா, வீட்டில் இருந்த மண்ணென்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றி, நெருப்பு பற்ற வைத்துள்ளார்.
உடலில் தீப்பற்றிய நிலையில் அவரது மனைவி அலறியுள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராம்ஜி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளையராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.