Skip to main content

மனைவியால் கணவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019

தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் ஆற்றில் தள்ளி கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஏரி தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு வெங்கடேசன் என்பவரோடு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. வெங்கடேசன் மற்றும் செல்வி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது குடித்துவிட்டு மனைவியோடு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் மது குடித்து வருவதால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விசைத்தறி வேலை செய்து வரும் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் செல்விக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. 


அப்போது கணவன் வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடன் சண்டை போடுவதாக பெருமாளிடம் செல்வி கூறியுள்ளார். இதனை கேட்ட பெருமாள், வெங்கடேசனை கொலை செய்து விடலாம் என்று செல்வியிடம் கூறியுள்ளார். கணவனை கொலை செய்ய செல்வியும் சம்மதம் தெரிவித்ததால் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.  இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி இரவு வெங்கடேசனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிகளவு மது குடித்ததால் வெங்கடேசனுக்கு அதிக அளவு போதை எறியுள்ளது. பின்னர் குடிபோதையில் தன்னை மறந்து இருந்த வெங்கடேசனை காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்திற்கு அழைத்து சென்ற பெருமாள் அங்கிருந்து அவரை ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு வெங்கடேசனை கொலை செய்ததை வெளியில் சொல்லாமல் இருக்க செல்வியிடம் பலமுறை தகாத உறவை பெருமாள் வைத்துள்ளார். 
  incident



மேலும் தினமும் உறவு வைக்க செல்வியை பெருமாள் கொடுமைப் படுத்தியுள்ளார். அவரும் பெருமாளுக்கு தேவைபடும் போதெல்லாம் உறவு வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பெருமாள் செல்வியிடம் கட்டாயப்படுத்தி உறவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தனது கணவனை, கள்ளக்காதலன் பெருமாளுடன் சேர்ந்து கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். பின்பு செல்வியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி உள்ள பெருமாளை போலிஸார் தேடி வருகின்றனர். அதோடு கொலை செய்யப்பட்ட இடத்தில் வெங்கடேசன் உடல் உள்ளதா என்றும் தேடி வருகின்றனர். கணவனை கள்ளக்காதலன் உதவியோடு மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.