Advertisment

போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்; கணவன் மனைவிக்கு காப்புபோட்ட காவல்துறை

Husband and wife arrested for selling cannabis

திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தனர். அந்த 2 பேரும் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

Advertisment

இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்த போது திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சிவகுமார்(25), இவரது மனைவி சத்யா (21) என தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 2,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

மேலும் அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.90 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை மணல் வாரி துறை ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சரியான புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (54) சேட்டு (30) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அவர்களிடம் இருந்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

arrested Cannabis police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe