Skip to main content

வலி தாங்க முடியாமல் ஓடிய மனைவி... விடாமல் விரட்டிய கணவன்... அதிர்ச்சியில் உறைந்த மகன்கள்...

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

 

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே பழஞ்சூரில் உள்ள பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக உள்ளார். அந்த தோட்டத்திலேயே தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (54). கணவருடன் அந்த தோட்டத்திலேயே ரேவதி தங்கி உள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றும் உள்ளது. அந்த வீட்டில் இவரது மகன்கள் வசித்து வருகின்றனர். ரேவதி மட்டும் மகன்களை பார்க்க வீட்டிற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

 

Husband and wife



இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரேவதி வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த அவரது மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவருக்கு அருகே சிறிது தூரத்தில் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு, தலையில் காயங்களுடன் தாய் ரேவதி இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது. 
 

இதனை கண்டதும், அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
 

இதைதொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.


 

விசாரணையில், நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து, ரேவதியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். அப்போது வலி தாங்கமுடியாமல் ரேவதி, அவரிடம் இருந்து தப்பித்து தோட்டத்தின் வழியாக தப்பி ஓடியதாகவும், இருப்பினும் மாரிமுத்து அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி, தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு மாரிமுத்து, அதே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.