Skip to main content

“இரக்கப்பட்டு உதவி செஞ்சோம், ஏமாத்திட்டு போய்ட்டாங்க” - 500க்கும் மேற்பட்ட மக்கள் குமுறல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions
கணவன் - மனைவி

 

நாகை அருகே நுண்கடன் நிதி நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஒரத்தூர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வித்யா. வித்யா அருகில் உள்ள நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். காந்தி பொரவாச்சேரியில் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். வித்யா கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பெண்களிடம், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்றும் புது பட்டறை துவங்கப்போகிறோம் என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி உங்கள் பெயரில் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுங்கள். அந்த கடனை நான் கட்டி விடுகிறேன் என்று சொல்லிக் கேட்டுள்ளார்.

 

அவர்களின் உடல்நிலையைக் கண்டு இரக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதேபோல் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி, பாப்பாகோவில், நிர்த்தனமங்கலம், நரியங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் அரேஸ், பிங்கர், ஈஷாப், லெஷ்மி கடாட்ஷம், கிராமின் கோட்டா, உதயம், ஜோதி, எக்விடாஸ், பெல் ஸ்டார், சமஸ்தானம், பியூஷன், கிராம விடியல் உள்ளிட்ட பல்வேறு நுண்கடன் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

 

வித்யா அரசுப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக இருந்ததால் அவர்களும் நம்பி தங்களது பெயரில் 5, 6 நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி பெண்களிடம் இருந்து ரேசன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு குழுத் தலைவியாகவும் செயல்பட்டு அவர்களுக்கு தெரியாமலேயே துணைக் கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளனர். 

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions

 

இந்த நிலையில் காந்தியும் அவரது மனைவி வித்யாவும் கடந்த வாரம் ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஊருக்கு வரவில்லை. அப்போது அந்த வாரத்தில் நுண்கடன் நிறுவனங்களுக்கு பணம் கட்டாததால் அதன் ஊழியர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு வந்து பணம் கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண்கள் வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் ஒவ்வொரு பெண்களும் வித்யா வீட்டிற்கு வர, அவர்கள் கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களுடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றி ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி, வித்யா வீட்டின் முன்பு திரண்ட கிராம மக்கள் மண்ணை வாரி இறைத்தும் சாபம் விட்டும் அழுது புலம்பியதோடு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மோசடி செய்த கணவன், மனைவி மீது புகார் அளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.