Skip to main content

மனைவியால் ஏற்பட்ட அவமானம்... கணவன் எடுத்த விபரீத முடிவு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

மனைவியால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் அவருடைய கணவன் மற்றும் குழந்தைகள் கியாஸ் சிலிண்டர் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தை  சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி கீதா(31). இந்த தம்பதிக்கு பிரதீபா (8), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கருப்பையா மனைவி கீதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற வாலிபருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கருப்பையா மனைவியையும், அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு கணவன், மனைவிகளுக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையாவின் மனைவி கீதா கோபித்து கொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

 

incident



இதனையடுத்து தனது இரண்டு மகள்களுடன் கருப்பையா அதே ஊரில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வேறு ஒரு வாலிபருடன் பழகிய அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள கருப்பையா முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தான் இறந்துவிட்டால் மகள்கள் அனாதையாக இருந்து விடுவார்கள் என்று எண்ணிய கருப்பையா அவர்களையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பாமல், தான் நடத்தி வரும் டீ கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்கச் செய்து  கருப்பையா மற்றும் அவருடைய 2 மகள்களும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. சம்பவ இடத்தில் கருப்பையாவும், அவருடைய மூத்த மகள் பிரதீபாவும் தீயில் கருகி பிணமாக கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

   

incident



பின்பு தகவல் அறிந்து வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி கீதா, கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தகுமார், இவருடைய தந்தை கருப்பையா, தாய் சொர்ணம், சகோதரி அபிராமி, கீதாவின் தந்தை பெரியகருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கீதா, பெரியகருப்பன், மலைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கருப்பையா மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த ஆனந்தகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி, கருப்பையா உள்பட 3 பேர் உடல்களை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் நேற்று மதுரை-தேனி சாலையில் தொட்டப்பநாயக்கனுார் விலக்கில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட கருப்பையாவின் உறவினர்களிடம் போலீஸார் சமாதானம் செய்து, கண்டிப்பாக ஆனந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்கிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் செய்வதை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மதுரை-உசிலம்பட்டி, தேனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


   

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.