Skip to main content

மனைவியால் ஏற்பட்ட அவமானம்... கணவன் எடுத்த விபரீத முடிவு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

மனைவியால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் அவருடைய கணவன் மற்றும் குழந்தைகள் கியாஸ் சிலிண்டர் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தை  சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி கீதா(31). இந்த தம்பதிக்கு பிரதீபா (8), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கருப்பையா மனைவி கீதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற வாலிபருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கருப்பையா மனைவியையும், அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு கணவன், மனைவிகளுக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையாவின் மனைவி கீதா கோபித்து கொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

 

incident



இதனையடுத்து தனது இரண்டு மகள்களுடன் கருப்பையா அதே ஊரில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வேறு ஒரு வாலிபருடன் பழகிய அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள கருப்பையா முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தான் இறந்துவிட்டால் மகள்கள் அனாதையாக இருந்து விடுவார்கள் என்று எண்ணிய கருப்பையா அவர்களையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பாமல், தான் நடத்தி வரும் டீ கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்கச் செய்து  கருப்பையா மற்றும் அவருடைய 2 மகள்களும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. சம்பவ இடத்தில் கருப்பையாவும், அவருடைய மூத்த மகள் பிரதீபாவும் தீயில் கருகி பிணமாக கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

   

incident



பின்பு தகவல் அறிந்து வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி கீதா, கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தகுமார், இவருடைய தந்தை கருப்பையா, தாய் சொர்ணம், சகோதரி அபிராமி, கீதாவின் தந்தை பெரியகருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கீதா, பெரியகருப்பன், மலைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கருப்பையா மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த ஆனந்தகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி, கருப்பையா உள்பட 3 பேர் உடல்களை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் நேற்று மதுரை-தேனி சாலையில் தொட்டப்பநாயக்கனுார் விலக்கில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட கருப்பையாவின் உறவினர்களிடம் போலீஸார் சமாதானம் செய்து, கண்டிப்பாக ஆனந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்கிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் செய்வதை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மதுரை-உசிலம்பட்டி, தேனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


   

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.