Skip to main content

19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

humanity in incident... villan actor help

 

பிறந்த நாளிலிருந்து இன்று வரை பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் நிலையைக் கண்டு பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பாக்கியலெட்சுமி, கயல்விழி, கன்னிகா ஆகிய மகள்களும், கலையரசன் (19) கலைவாணன் (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய மனைவி தங்கசெல்வி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

 

humanity in incident... villan actor help


மூத்த மகனான கலையரசன் பிறக்கும்போதே கண், மூக்கு மற்றும் உதடுகள் மூடிய படியே பிறந்ததால், அந்த நேரத்தில் தாய்ப்பால் கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். மகனின் நிலைமையைக் கண்டு வேதனையடைந்த கலையரசனின் தந்தை கண்ணன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். அதன்பின்னர், பேச ஆரம்பித்து தற்போது கிராம மக்களிடையே அழகாகப் பேசியும் பாட்டுப் பாடியும் வருகிறார். 

 

இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளை உட்கொள்ளும்படியாக அவருடைய வாய் அமைப்பு இல்லாததால், பிறந்த நாள் முதல் இன்றுவரை பால் பவுடரை மட்டுமே உணவாக உண்டு உயிர்வாழ்ந்து வருகிறார். கலையரசனுக்கு உதவியாக தங்கை கன்னிகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுக் கவனித்து வருகிறார்.

 

Ad

 

இதுகுறித்து, கலையரசனின் அக்கா பாக்கியலட்சுமி கூறுகையில், "எங்க அப்பா கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் எங்க குடும்பமே நடக்குது. கரோனாவால் இப்போ வேலை ஏதும் இல்லாம குடும்பத்தை நடத்தவே போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். கலையரசனுக்கு வயதும் ஆகிவிட்டதால், அதிக பால்பவுடர் தேவைப்படுகிறது. அதை வாங்கக்கூட முடியாத நிலமையாகிடுச்சி. தம்பி கலைவாணன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காய்கறிக் கடையில் வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பால்பவுடர் வாங்கிக் கொடுத்து வருகிறான். தமிழக அரசு எனது தம்பியின் நிலையறிந்து உதவி செய்திட வேண்டும்." என்றார். 

 

humanity in incident... villan actor help


இந்தச் செய்தி, நக்கீரன் இணையதளத்தில் வெளியாகியிருந்த நிலையில், பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு, பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்ததோடு, தனது சகோதரனுக்காகவும், குடும்ப சூழலுக்காகவும் படிப்பை பாதியில் விட்ட கலைவாணனை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரில் சேர்க்கவும், அவருடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துளளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.