Skip to main content

19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

humanity in incident... villan actor help

 

பிறந்த நாளிலிருந்து இன்று வரை பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் நிலையைக் கண்டு பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பாக்கியலெட்சுமி, கயல்விழி, கன்னிகா ஆகிய மகள்களும், கலையரசன் (19) கலைவாணன் (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய மனைவி தங்கசெல்வி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

 

humanity in incident... villan actor help


மூத்த மகனான கலையரசன் பிறக்கும்போதே கண், மூக்கு மற்றும் உதடுகள் மூடிய படியே பிறந்ததால், அந்த நேரத்தில் தாய்ப்பால் கூட குடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். மகனின் நிலைமையைக் கண்டு வேதனையடைந்த கலையரசனின் தந்தை கண்ணன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். அதன்பின்னர், பேச ஆரம்பித்து தற்போது கிராம மக்களிடையே அழகாகப் பேசியும் பாட்டுப் பாடியும் வருகிறார். 

 

இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளை உட்கொள்ளும்படியாக அவருடைய வாய் அமைப்பு இல்லாததால், பிறந்த நாள் முதல் இன்றுவரை பால் பவுடரை மட்டுமே உணவாக உண்டு உயிர்வாழ்ந்து வருகிறார். கலையரசனுக்கு உதவியாக தங்கை கன்னிகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுக் கவனித்து வருகிறார்.

 

Ad

 

இதுகுறித்து, கலையரசனின் அக்கா பாக்கியலட்சுமி கூறுகையில், "எங்க அப்பா கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் எங்க குடும்பமே நடக்குது. கரோனாவால் இப்போ வேலை ஏதும் இல்லாம குடும்பத்தை நடத்தவே போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். கலையரசனுக்கு வயதும் ஆகிவிட்டதால், அதிக பால்பவுடர் தேவைப்படுகிறது. அதை வாங்கக்கூட முடியாத நிலமையாகிடுச்சி. தம்பி கலைவாணன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காய்கறிக் கடையில் வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பால்பவுடர் வாங்கிக் கொடுத்து வருகிறான். தமிழக அரசு எனது தம்பியின் நிலையறிந்து உதவி செய்திட வேண்டும்." என்றார். 

 

humanity in incident... villan actor help


இந்தச் செய்தி, நக்கீரன் இணையதளத்தில் வெளியாகியிருந்த நிலையில், பால்பவுடரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்து வருகிற 19 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு, பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் நிதியுதவி செய்ததோடு, தனது சகோதரனுக்காகவும், குடும்ப சூழலுக்காகவும் படிப்பை பாதியில் விட்ட கலைவாணனை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரில் சேர்க்கவும், அவருடைய கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துளளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
lollu sabha actor seshu in hospital

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் குணமடைய அவரது நெருங்கிய வட்டாரங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Next Story

படிக்காதவன் பட குட்டி ரஜினி காலமானார்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
actor and director surya kiran passed away

தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர் மாஸ்டர் சுரேஷ். கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள், படிக்காதவன், ரங்கா, மனிதன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் நடித்து வந்த இவர் பின்பு சூரிய கிரண், என பெயரை மாற்றி கொண்டு இயக்குநராக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற  படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விரும் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் (48) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் பின்பு வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் காலை 11 மணியளவில் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.