Skip to main content

உயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்!!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
incident kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வசித்து வந்தார், காவலர் கோபி. இவர் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 26.5.2020 அன்று மாலை பணிமுடிந்து தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். தியாகதுருகம் பைபாஸ் சாலை அருகே வரும் போது விபத்துக்குள்ளாகி கோபி உயிரிழந்து விட்டார்.

 

இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 12 வயதில் ஹரிஹரன் என்ற மகன், நேத்ரா என்ற 10 வயது மகளும், வயதான தாய், தந்தை என கூட்டுக்குடும்பமாக உள்ளனர். இவர்களின் குடும்ப சூழ்நிலையை பார்த்த சக காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவும் கரங்கள் என்ற குழுவை உருவாக்கி வாட்ஸ் அப்பில் மூலம் 2003 (பேட்ச்)ஆண்டில் பணிக்கு சேர்ந்த தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு 5043 என்ற எண்ணை துவக்கி அதன் மூலம் கோபி குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.

 

காவலர்களின்  வேண்டுகோளுக்கிணங்கி காவல் துறையைச் சேர்ந்த பலர் நிதி உதவி அளித்துள்ளனர். அப்படி அவர்கள் அளித்த நிதி 25,21,500 ரூபாய் பணத்தை மறைந்த காவலர் கோபியின் நண்பர்களான சக காவலர்கள் இணைந்து நேற்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த பணத்தில் கோபி மகன் ஹரிஹரன் பேரில் சுமார் 9 லட்சம் ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசியும், கோபி மகள் நேத்ரா பெயரில் 10 லட்ச ரூபாய் பாலிசியும், கோபியின் தாய் தந்தை இருவருக்கும் இரண்டரை லட்ச ரூபாய் அவர்களின் அந்திமகால செலவினங்களுக்கும். கோபியின் மனைவி காஞ்சனாவிற்கு 2,60,000 ரூபாய் அவரது குடும்ப செலவிற்கும். இதுயில்லாமல் 3000 ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு பாலிசியையும் எடுத்து இதற்கான ஆவணங்களையும், பணத்தையும் அவர்கள் கையில் கொடுத்தனர்.

 

இப்படி தனது கணவர் இறந்தும் அவரது சகோதரர்கள் போல உதவி செய்தசக காவலர்கள் செய்த உதவியை கண்டு அவரது மனைவி காஞ்சனாவும், தனது பிள்ளை இறந்தும் தங்கள் பிள்ளைகள் போல தங்களுக்கு உதவி செய்த காவலர்களை பார்த்து கோபியின் பெற்றோர்களும் கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

 

கோபி குடும்பத்திற்கு தமிழக அளவில் பல்வேறு காவலர்கள் உதவி செய்துள்ள சக காவலர்களுக்கு அந்த குடும்பத்தினரும் கோபியின் சககாவல்  நண்பர்களும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளனர். இதேபோன்று சக காவலர்கள் குடும்பம் கஷ்டப்படும்போது அவர்களுக்கு நாங்கள் உதவும் கரங்களாக இருப்போம் என்கிறார்கள் 2003 பேட்ஜை சேர்ந்த காவலர்கள். கணவரை இழந்து தவித்த அந்த குடும்பத்தினருக்கு இந்த மிகப்பெரிய உதவி என்கிறார்கள் மறைந்த காவலர் கோபியின் உறவினர்கள் காவலர்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள இந்த மனித நேய உதவி பலரையும்  மனம் நெகிழ வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 45 லட்சம்; வங்கி பணமா? ஹவாலா பணமா? - கார் நம்பரால் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
45 lakhs seized in car with car number

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் சாவடியில் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர்  மார்ச் 19 ஆம் தேதி இரவு அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 45 லட்சம் பணம்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறக்கும் படை அதிகாரியான செந்தில் குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி கார் வந்தது தெரிந்தது. அந்த பணம் தனியார் வங்கிக்குச் சொந்தமானது என்று தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தொகையும் , காரில் இருந்து தொகையும் சரியாக இருந்தது. ஆனால் ஆவணத்தில் இருந்த காரின் எண்ணும், பணம் கொண்டு வந்த காரின் எண்ணும்  வேறுபட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்தபோது சரியாக பதில் சொல்லவில்லையாம். இதனால் பணத்துடன் அந்த கார் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்கள் மாறி மாறி இருப்பதால் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.