Skip to main content

மனித உரிமை ஆர்வலர் கொலை வழக்கு; அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Human rights activist's case. 8 people including ADMK leader sentenced to life imprisonment

 

திருவண்ணாமலை நகர கிரிவலப்பாதையில் வசித்து வந்தவர் ராஜ்மோகன் சந்திரா. மனித உரிமை விவகாரங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ராஜ்மோகன் சந்திராவை கிரிவலப்பாதையில் வைத்து சிலர் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை அப்போது நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி மாநில அளவில் போராட்டம் நடத்தியது. திருவண்ணாமலையில் கண்டனக் கூட்டங்களும் நடைபெற்றன.

 

அதன்பின், இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் A1 வெங்கடேசன் தந்தை பெயர் வீராசாமி, A2 செல்வம் தந்தை பெயர் வீராசாமி (இறந்துவிட்டார்), A3 காசி என்கிற வீராசாமி தந்தை பெயர் கண்ண கவுண்டர் (இறந்துவிட்டார்), A 4 மீனாட்சி கணவர் பெயர் செல்வம், A 5  முருகன் தந்தை பெயர் தனபால், A6  சந்திரசேகர் தந்தை பெயர் மகாசாமி, A7 ஐயப்பன் தந்தை பெயர் சிவசங்கரன், A8  விஜயராஜ் தந்தை பெயர் மண்ணாங்கட்டி, A9 சடையன் தந்தை பெயர் சப்ப காலன், A10 சுப்பிரமணி தந்தை பெயர் முனியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று 2023 ஜனவரி 23 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கு நடந்தபோதே இறந்த இருவர் தவிர்த்து மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை வழங்கப்பட்டதும் நீதிமன்றத்திலிருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.