மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி டெல்டா மாவட்டங்களையும் தாண்டி, தமிழக கடலோரங்களை கபளீகரம் செய்யும் வகையில் மீத்தேன் - ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல பேரழிவு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மண்ணுரிமையையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றும் வகையில் பொதுமக்கள் கொதித்து எழுந்துள்ளதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்நிலையில், நிலைமை கைமீறி போவதை தடுக்க வேண்டிய நிலை அவசர - அவசியமாக உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 12 அன்று, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதுடன் , இதில் மஜகவினர் திரளாக பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவு வழங்கி , நமது மண்ணுரிமையை பாதுகாக்க களம் காண வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.