தமிழகத்தில்ரதயாத்திரை நடந்து முடிந்தது குறித்து,பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அந்த ட்விட்டில் அவர்,"தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரை மிகப்பெரிய மக்கள் ஆதரவுடன் அமைதியாகவும் எழுச்சியுடனும் முடிவடைந்தது. ஒரு காவல்துறை உயர் அதிகாரி 2.5 லட்சம் பேர் பங்கு பெற்றனர் என்று கூறினார். பதட்டமே சட்டமன்றத்தில் திமுக மற்றும் இந்து விரோத சக்திகள் உருவாக்கியது தான்". இவ்வாறு கூறியுள்ளார்.