Skip to main content

கலவரம் ஏற்படுத்த திராவிடர் கழகம் செயல்படுகிறது! - எச்.ராஜா

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
h.raja


மதுரையில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குபடி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரதயாத்திரை செல்கிறது. 
 

அப்போது பேசிய எச்.ராஜா, மத ஊர்வலத்திற்கு 144 தடை உத்தரவு பொருந்தாது. ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், கலவர சூழலை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் செயல்படுகிறது. இவ்வாறு கூறினார். 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி ராமராஜ்ய ரதயாத்திரை புறப்பட்டது. இந்த ரதயாத்திரை மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்துக்கு வந்தது.

ராம ராஜ்யத்தை மீண்டும் அமைக்க வேண்டும். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும். தேசிய வாராந்திர விடுமுறை தினமாக வியாழக் கிழமையை அறிவிக்க வேண்டும். உலக இந்து தினம் கொண்டாட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத யாத்திரை நடந்தது.

கேரளாவில் இருந்து ராமராஜ்ய ரதம் நேற்று காலையில் தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரைக்கு வந்தது. கிருஷ்ணானந்த சரசுவதி சுவாமிகள், சாந்த ஆனந்த மகரிஷி ஆகியோர் தலைமையில் ரத யாத்திரை புறப்பட்டு வந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு தமிழக-கேரள எல்லையான கோட்டை வாசல் கருப்பசாமி கோவிலுக்கு ரதம் வந்தது. ரதத்தில் ராமர்- சீதை சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் ரதம் செங்கோட்டை வந்தது. அதன் பிறகு தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக ராமராஜ்ய ரதம் மதுரைக்கு சென்றது.

மதுரைக்கு சென்ற ரதம், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றடைகிறது. நாளை (வியாழக் கிழமை) ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக வந்து கன்னியாகுமரி சென்றடைகிறது. 23-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.