Skip to main content

ஹெச்.ராஜா வை கைது செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முடிவு

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

கடந்த 15.05.2019 அன்று கொடைக்கானலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கீழக்கரை முஸ்லீம்களை தீவிரவாதி என சித்தரித்து பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கீழக்கரை கிளையின் சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை காவல் நிலையத்தில் எஸ்.ஐ மாடசாமியிடம் புகார் அளித்துள்ளனர்.

 

k

 

அந்த புகாரில்,  கீழக்கரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் அண்னன் தம்பிகளாகவும்,
மாமன், மச்சான்களாகவும்  ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியில் ஹெச்.ராஜா வேண்டும் என்றே இந்து மக்களையும், இஸ்லாமிய மக்களை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத துவேசத்துடன் பேசி வருகிறார். இந்த பகுதியில் யாரும், யாருக்கும் அடிமையாக இல்லை.

 

k

 

கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்துமக்களும் சென்று வருகிறார்கள்.   இஸ்லாமிய மக்களும் சென்று வருகிறார்கள். ஒரு பிரச்சனையும் வரவில்லை.  இன்று வரை இவர் வேண்டும் என்றே தொடர்ந்து மத துவேசத்துடன் பேசி வருகிறார். இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.  தவறும் பட்சத்தில் தலைமை ஒப்புதலுடன் தொடர்ந்து அவரை கைது செய்யும் வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கையும் சீரியசாக இருக்கும்” - ஹெச். ராஜா

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
H.Raja says If the Chief Minister does something seriously, the action of the Central Government will also be serious

2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாஜக கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி இன்று (10-02-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என யாராவது சொன்னால், அந்த அரசாங்கம் இந்திய சட்டப்படி நடத்தப்படவில்லை என பொருள்.

இந்திய அரசியல் சட்டப்படி நடக்கவில்லை எனில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஏனெனில் 1976ல் அவரது அப்பா நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீரியசாக இருக்கும்” என்று கூறினார்.

Next Story

சொந்த ஊரிலேயே எச்.ராஜாவை விரட்டியடித்த பா.ஜ.க.வினர்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

BJP expelled H.Raja in his hometown

 

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் 66ஆவது பிறந்த நாள் நேற்று (29-09-23) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் எச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

 

இதனை தொடர்ந்து, எச்.ராஜாவின் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மணி மந்திர விநாயகர் கோவிலில் எச்.ராஜா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு பூஜையை பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையை பா.ஜ.க கூட்டுறவுத் துறை பிரிவு மாநில செயலாளர் பால ரவிராஜன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

இந்த நிகழ்வுக்கு சிவகங்கை மண்டலத் தலைவரும், திருப்புவனம் ஒன்றிய தலைவருமான மோடி பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எச்.ராஜா நேற்று இரவு அங்கு வந்திருந்தார். அங்கு வந்த எச்.ராஜாவை, பால ரவிராஜன் தரப்பினர் வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த மோடி பிரபாகரன் மற்றும் அவரது தரப்பினர், எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் தடுத்து காரை மறித்தனர்.  மேலும், அவர்கள் எச்.ராஜா வருகை குறித்து எங்களுக்கு ஏன் உரிய தகவலை தெரிவிக்கவில்லை? என்று பால ரவிராஜனிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர். 

 

அப்போது, எச்.ராஜா மோடி பிரபாகரனை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், பால ரவிராஜனுக்கும், மோடி பிரபாகரனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், எச்.ராஜாவின் முன்னிலையில் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் அனைவரையும் சமாதானம் செய்து எச்.ராஜாவை பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் பிரச்சனையால் பிறந்தநாள் விழா கொண்டாட வந்த எச்.ராஜாவை பா.ஜ.க.வினரே விரட்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.