Skip to main content

ஸ்டாலின் மக்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்... ஹெச்.ராஜா பேட்டி!!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

 மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசுகையில்,

"திமுகவும் அதனுடைய இலவச இணைப்புகளும் சேர்த்து தமிழகத்தில் மத ரீதியான தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஒரு மசோதாவை ஆதரித்து அல்லது எதிர்த்து வாக்களிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. சீமான் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி வருகிறார். இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விதிமுறைக்கு புறம்பாக நடந்த கோவில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும், திமுகவுக்கு அரசியல் அறிவு இல்லாததால் பிரசாந்த் கிசோரை அழைத்து வந்துள்ளது. தேர்தலுக்காக திமுக நாடகம் நடத்தி வருகிறது. 

 

H.RAJA INTERVIEW I MADURAI

 

திமுக அரசியலுக்கு சி.ஏ.ஏ என்கிற போர்வையை கையில் எடுத்து உள்ளது. ஸ்ரீரங்கத்தில் பொட்டை அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என செல்பவர்கள் பள்ளிவாசலில் தமிழில் வழிபாடு நடத்த முடியும், தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறிய பெரியார் தமிழின துரோகி, ஊடகங்கள் அனைத்துயும் புரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும். சீமான் மதில் மேல் பூனையாக பேசி வருகிறார். இந்து கோவில்களில் தமிழ் மொழியில் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்து மதத்தை அழிக்க கார்டு வெல் தலைமையில் கூட்டம் செயல்பட்டு வருகிறது. 

நெய்வேலியில் சீனிமா படப்பிடிப்பில் ஏற்கனவே விபத்து நடந்ததால் விஜய் படப்பிடிப்பு நடத்த கூடாது என செல்கிறோம், காஷ்மீரில் மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றனர்.  தமிழகத்தில் பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். மோடி பிரதமராக பொற்றுப்பேற்ற பின்னர் இலங்கையில் ஒரு தமிழர் கொல்லப்படவில்லை, வருமானவரித்துறை சுயட்சையாக செயல்பட்டு வருகிறது.

சினிமாத்துறையில் கருப்பு பணம் உள்ளது, சரஸ்வதி நதி இருந்தது நிரூபிக்கப்பட்டது. கால போக்கில் மறைந்து விட்டது. அந்த அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கீழடியில் அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும்" என கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.