Skip to main content

’சிறுநீர் பாசனம்’ என கூறியதற்கு எச்.ராஜாவின் விளக்கம்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018


நுண்நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழி பெயர்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.

2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

 

இதையடுத்து, சென்னையில் நேற்று இரவு பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அப்போது அமித்ஷா பேசியதை எச்.ராஜா மொழிபெயர்த்தார்.

பாஜக அரசின் சாதனைகளை அமித்ஷா பட்டியலிட்ட போது, மைக்ரோ இரிகேஷன் திட்டத்திற்காக ரூ.332 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறினார். மைக்ரோ இரிகேஷன் என்பதற்கு நுண்நீர் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு. ஆனால், நுண்நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என எச்.ராஜா மொழி பெயர்த்து கூறினார். இந்த சம்பவம் அங்கிருந்த பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், எச்.ராஜா பேசயது சமூகவலைதளங்களில் வீடியோவாகவும், மீம்ஸ்களாகவும் வைரலாக பரவி வருகிறது.


இந்நிலையில் தனது மொழிபெயர்ப்பு குறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், டிக்ஸ்னரியில் மைக்ரோ என்பதற்கு அர்த்தத்தை தேடி அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.