Skip to main content

எச்.ராஜா பற்றிய கேள்வி.... பதில் சொல்ல மறுத்த அமைச்சர்

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தி யாளர்களிடம் பேசினார்.

 

b

 

அப்போது அவர்,  "கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளுக்கு பதிலாக அங்குள்ள சில வீடுகளில் பள்ளிக்கூடங்கள் நடைபெற்று வருகிறது.

 

கோபிசெட்டிபாளையத்தில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர்  ஈஸ்வரன் கேட்கிறார், அந்த ஈஸ்வரனைப் போன்றவர்கள் கோரிக்கை வைப்பது மிக சுலபம்.  காரியம் செய்வது கடினமானது . அவர் வேண்டுமானாலும் கோபிசெட்டிபாளையம்  நகரின் மையப்பகுதியில் 100 ஏக்கர்  நிலம் எடுத்து தரட்டும், அப்புறம் அது பற்றி யோசிப்போம்." என்றார்.

 

b

 

மத அடையாளங்களை பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என சுற்றறிக்கை விடுத்தது பற்றி கூறும் போது,  "பள்ளிகளில் இதுபோன்ற நிலை இல்லை.  இந்த சுற்றறிக்கை அனுப்பிய சம்பந்தப்பட்ட துறை எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.  இதன் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது. அந்த சுற்றறிக்கை எங்களை கலந்தாலோசிக்காமல் அப்படியே முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.   எந்த பள்ளிகள் இது போன்ற மத அடையாளங்களை அணிந்து வருகிறார்கள் என்பது தெரிந்தால்  கூறுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என அமைச்சர் தெரிவித்தார்.

 

சார் பா.ஜ.க. எச்.ராஜா சொல்லிய கருத்து.... என செய்தியாளர்கள் தொடர,  எதுவும் பேசாமல் வணக்கம் போட்டுவிட்டு நகர்ந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆனி மாத அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த மக்கள்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

 

 

 

Next Story

களையிழந்த தமிழகத்தின் காசி... சடங்குகளையும் விட்டுவைக்காத கரோனா!!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
corona erode bavani

 

கடவுள் மட்டுமா கண்ணுக்கு தெரியாதது நானும்தான் என உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா வைரஸ், மனிதகுலம் அன்றாட வாழ்வில் நகர்ந்து வந்த வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டதுதான் இந்த வைரஸ் தொற்று. குறிப்பாக சடங்குகள் என்பது மனித சமூகத்தில் ஒன்றாக நடந்து வருகிறது. அமாவாசை, ஆடி ஒன்று, ஆடி பதினெட்டு, தைப்பொங்கல், தீபாவளி, சித்திரை ஒன்று என பல்வேறு நிகழ்வுகள் மனித சமூகத்தில் சடங்குகளாகவும், விழாக்களாகவும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

அதில் ஒன்றுதான் ஆடி அமாவாசை, இந்த தினத்தில் தமிழகத்தில் ஆறுகள் உள்ள இடங்கள் கால்வாய்கள், குளங்கள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் மக்கள் பல்லாயிரம் பேர் கூடி அவர்களின் பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம், ஏறக்குறைய தமிழ்நாடு முழுக்க பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சடங்குகளை செய்து வந்தார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை அதற்கு காரணம் இந்த வைரஸ் தொற்று தான்.

 

corona erode bavani


அரசாங்கம் மக்கள் கூடக்கூடாது நீர்நிலைகளில், கோயில்களில் மக்கள் கூட்டம் எதுவும் கூடாது என தடை போட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த இந்தசடங்குகள் அனைத்தும் நடைபெற முடியாமல் தடுத்து விட்டது கரோனா வைரஸ். குறிப்பாக தமிழகத்தில் இரண்டாவது காசி என்றால் அது பவானி கூடுதுறை. இங்கு ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் ஆனால் இன்று, "யாரும் உள்ளே வராதீர்கள்" என பூட்டு போட்டு விட்டனர் காவல்துறையினர். வேறு வழியில்லாமல் யாரும் அங்கு செல்லவில்லை இதனால் அந்த இடமே களையிழந்து காணப்பட்டது. ஆக மனித மனங்களில் சாமி மற்றும் சடங்குகளின் நம்பிக்கைகளை, உள்ளார்ந்த விஷயங்களை முற்போக்கு பிரச்சாரம் செய்து தடுத்தாலும் நடக்காத அந்த நிகழ்வுகளை இந்த வைரஸ் தொற்று நிறுத்திவிட்டது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.