கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. இரதம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில் முறையான கல்வி தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜனவரி 8-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.