Skip to main content

காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு எத்தனை அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன? நீதிபதி கேள்வி

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
pc

 

காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப பணிகளுக்கு எத்தனை காவல் துறை வாகனங்கள் பயன்படுத்தபடுகின்றன என்று காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காவலர்களின் குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏன் இதுவரை அமல்படுவில்லை என்றும்  காவல் உயர் அதிகாரிகளின் வீட்டில் எத்தனை காவலர்கள் ஆடர்லியாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை உதவி ஐஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து  பார்த்த நீதிபதி,  தான் எதிர்பார்த்த படியே ஆடர்லி தொடர்பான எந்த தகலும் இல்லாமல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


மேலும் நீதிபதி, மொத்த காவலர்களில் 10 முதல் 15 சதவீதத்தினர் ஆடர்லியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் .  1990ல்   ஓய்வுபெற்ற காவலர் ஒருவர் இன்னும்    ஆடர்லியாக  பணியாற்றி வருகின்றார். மேலும் பல குற்ற வழக்குகள் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் வீட்டில் காவலர்கள் ஆடர்லியாக பணியாற்றி வருகின்றனர். இது போன்ற தகவல்கள் தங்களுக்கும் தெரியும் என்றார். 

 

இதனைத் தொடர்ந்து  காவல்துறையின்  எத்தனை  வாகனங்கள் அதிகாரிகள் மற்றும் அவர்களின்  குடும்பத்திற்கு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த பட்டு வருகின்றன? காவல்துறையினரின் பணி நேரத்தை ஏன் நிர்ணயிக்க கூடாது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும்  நீதிமன்றத்தில் தவறான பதில் மனு தாக்கல் செய்த ஐ.ஜி அன்றைய தினம்  நேரில் ஆஜராக வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.