Skip to main content

''எப்படித்தான் வாழ்வது...'' குமுறும் சிறுவாடி கிராம மக்கள்!    

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

 How to live ... Kurum Chiruvadi villagers!

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் உள்ளது சிறுவாடி ஊராட்சி. அக்கிராமத்தின் அவல நிலை கண்டுகொள்ளாத மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சிறுவாடி கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

 

மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள சிறுவாடி ஊராட்சியில் 2,500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் அனைவரும் விவசாய குடும்பங்கள். இதில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தினந்தோறும் காலை மாலை என குழாயின் மூலம் தண்ணீர் பிடிப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக குடிநீர் தண்ணீர் வருவதில்லை. இதனால் இந்த மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் குடும்பங்கள்  தினந்தோறும் காலை மாலை என தண்ணீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து குடிநீர் பிடிக்கும் குழாய்களில் பைப்  டேப்கள் உடைந்துள்ளன. இதனால் தண்ணீர் வீணாகி செல்கின்றன. இதனால் தண்ணீர் தெருக்களிலும் அங்குள்ள பள்ளத்திலும்  குட்டைகளிலும் தேங்கி நிற்கின்றன.

 

 How to live ... Kurum Chiruvadi villagers!

 

இதில் தேங்கி நிற்கும் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நிற்பதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய், மர்ம காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம், மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். எப்படித்தான் வாழ்வது என குமுறும் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிராமத்தின் சார்பில் பொதுமக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை நேரிலும் சந்தித்து பேசியும் நடவடிக்கை இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று  மாரியம்மன் கோவில்  தெருவை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.