Skip to main content

''எவ்வளவுதான் கஷ்டப்பட்டு வாழுறது''-கணவனால் வெள்ளத்தில் இறங்கிய பெண்ணை மீட்ட போலீசார்! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

'' How hard it is to live '' - Police rescue woman who was drowned by her husband!

 

கணவன் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதால் மனமுடைந்த பெண் ஒருவர் வைகை ஆற்று வெள்ளத்தில் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். பிருந்தாவன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் குடிக்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில் குடித்துவிட்டு குடும்பத்தில் தினமும் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தனின் மனைவி மல்லிகா வைகையாற்றில் இறங்கினார்.

 

மல்லிகா ஆற்றில் இறங்குவதைக் கண்டு அதிர்ந்த ரோந்து போலீசார் அவரை கரைக்கு வரச்சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கரைக்கு வர மறுத்த நிலையில், ஆற்றில் இறங்கிய போலீசார் ராஜேஷ், பாலமுருகன் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தினார். "எவ்வளவு தூரம்தான் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வாழுறது'' என தற்கொலைக்கு முயன்ற பெண் இடுப்பளவு வெள்ள நீரில் அழுதுபுலம்புவதும், ''கரைக்கு வாம்மா பேசிக்கலாம்'' என போலீசார் அறிவுறுத்தும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.