Skip to main content

புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது எப்படி?

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

திரவமாக்கப்பட்ட பெட்ரோல் வாயுவே (Liquefide Petroleum Gas) LPG எனப்படும் சமையல் எரிவாயு ஆகும். இது ஹைட்ரோ கார்பனின் கலவையாகும். இதை குறிப்பிட்ட அழுத்தத்தில் சிலிண்டரில் அடைத்து பயன்படுத்தலாம். 

வீட்டுக்கு புதிய கேஸ் இணைப்பு பெறுதல் : 
வீட்டு உபயோக கேஸ் இணைப்பு LPG இணைப்பானது. 14.2Kg/5Kg எடையில் கிடைக்கிறது. 5Kg எடையுள்ள சிலிண்டர்கள் சில மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதியில் கிடைக்கிறது. 

 

gas app



வீட்டுக்கு புதிய சமையல்  எரிவாயு இணைப்பு பெற தேவையான ஆவணங்கள் :

1. குடியிருக்கும் வீட்டு முகவரியின் ஆவணங்கள் ஏதேனும் ஒன்று.
2.ஆதார் அட்டை .
3. குடும்ப அட்டை.
4.மின் கட்டண ரசீது.
5. வீட்டு வரி ரசீது.
6.பாஸ்போர்ட் .
7.பான் கார்டு.
8.வங்கி கணக்கு புத்தகம்.
9.தொலைப்பேசி எண் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இவை அனைத்தும் நகல் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து சமந்தப்பட்ட கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதில் குடும்ப அட்டை கட்டாயம் தேவைப்படும்.  வங்கி கணக்கு எண் பதிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு வாங்கும் போது மத்திய அரசு சமந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு மானியம் செலுத்தும். எனவே வங்கி கணக்கு புத்தக நகலை கட்டாயம் சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும்.

சமையல் எரிவாயுக்கான இணைப்பு டெபாசிட் தொகைகள் :

1. 47.5Kg சிலிண்டருக்கு - ரூபாய் . 4700.
2. 19Kg சிலிண்டருக்கு - ரூபாய் 1700.
3. 14.2Kg சிலிண்டருக்கு - ரூபாய் 1450.
4. 5kg சிலிண்டருக்கு - ரூபாய் 350.
5. இணைப்பு கட்டணம் - ரூபாய் 50.
6. ரெகுலேட்டருக்கு - ரூபாய் 150.

அடுப்பு  விண்ணப்பித்துடன் தேவையான ஆவணங்களுடன் டெபாசிட் தொகையை செலுத்தி உடனடியாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். சிலிண்டர்கள் விநியோகிப்பவர்கள் அடுப்பு வைத்திருந்தாலும் அவரிடமே அடுப்பு பெற வேண்டும் என கட்டாயம் இல்லை. ஆனால் அடுப்பு , ரப்பர் குழாய் இரண்டும் ISI தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். விநியோகஸ்தர்களிடம் ரூபாய் 100யை செலுத்தி 7 நாட்களுக்குள் அதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இணைப்பு பரிசோதனை : 

சுதா - ஜோஷியின் பரிந்துரைப்படி , இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விநியோகஸ்தரிடம் ரூபாய் 25 யை செலுத்தி  , அனுப்பப்படும் சரியான நபர் மூலம் கேஸ் இணைப்பை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

சமையல் எரிவாயு இணைப்பை மாற்றம் செய்தல்.
ஒரே விநியோகஸ்தர் கீழ் முகவரி மாற்றம் :
முகவரியில் மாற்றம் ஏற்படும் போது , விநியோகஸ்தரிடம் புதிய முகவரிக்கான ஆவணத்தைக் கொடுத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

ஒரே ஊரில் முகவரி மற்றும் விநியோகஸ்தர் மாற்றம் செய்வது எப்படி?

ஒரே ஊரில் இருக்கும் வேறொரு விநியோகஸ்தருக்கு மாறும் போது , நம்முடைய சந்தாதாரர் ரசீதியை (Subscription Voucher) கொடுத்தால் , புதிய விநியோகஸ்தருக்கு மாற்றம் ரசீதை (Transfer Termination Voucher) தயாரித்து கொடுப்பார். அவரிடம் புதிய குடியிருப்புக்கான ஆவணத்தைக் கொடுத்தால் , அவர் மாற்றுச்சந்தா ரசீதை (Transfer Subscription Voucher) கொடுப்பார். 

வெளியூருக்கு மாறுதல் செய்ய வேண்டுமா ? 

வெளியூருக்கு மாறுதல் செய்யும் போது இண்டேன் கருவிகள்  , சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டருடன் மாற்று ரசீதையும் (Transfer Voucher) விநியோகஸ்தரிடம் கொடுத்தால் , டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம். பிறகு செல்ல வேண்டிய ஊரில் கேஸ் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
 

gas connection

மகனுக்கோ / மகளுக்கோ மாற்றம் செய்ய வேண்டுமா ?
நுகர்வோர் தன் பெயரில் உள்ள இணைப்பை மகன் / மகளுக்கு மாற்றம் செய்ய தன் விண்ணப்பத்துடன் பின்வருவனவற்றை இணைத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
1.மகள் / மகனின் KYC.
2. இருப்பிட சான்று.
3. SV ரசீது.
4. மகன் அல்லது மகளின் வாக்குமூலம்.

நுகர்வோர் இறந்துவிட்டப்பட்சத்தில் வாரிசுத்தாரருக்கு மாற்றம் செய்ய தன் விண்ணப்பத்துடன் பின்வருவனவற்றை இணைத்து இணைப்பை மாற்றம் செய்து கொள்ளலாம்.
1.வாரிசுத்தாரரின் KYC சான்று.
2. இறப்பு சான்றிதழ்.
3. வாரிசு சான்றிதழ்.
4. இருப்பிடச்சான்று.
5. வாரிசுத்தாரரின் வாக்குமூலம்.

மேலே குறிப்பிட்ட சந்தாதாரர் (Subscription Voucher) ரசீது , மாற்று முடிவு ரசீது ( TTV ) அல்லது மாற்று ரசீது (TV) தொலைந்துவிட்டால் , விநியோகஸ்தரின் அதற்கான விண்ணப்பப்படிவத்தின் மாதிரியை பெற்று ரூ 80 க்கான முத்திரை தாளில் , நோட்டரி அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று , அப்பகுதிக்கான பகுதி மேலாளரிடம் சமர்பித்து இணைப்பு ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

குறைத்தீர்ப்பு : 
சென்னையை சார்ந்த நுகர்வோர்கள் , 94440-85731 , 044- 28339035 எண்ணை அழைத்து , தங்கள் புகார் அல்லது குறைகளை பதிவு செய்யலாம். பிற மாவட்டங்களை சார்ந்த நுகர்வோர்கள் , 1800 425 5565 , 0422- 2247396 எண்ணை அழைத்து , தங்கள் புகார் அல்லது குறைகளை பதிவு செய்யலாம்.

மத்திய அரசின் "இலவச எரிவாயு இணைப்பு திட்டம்" பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றனர். இவை கேஸ் நிறுவனத்தின் உதவியுடன் மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றனர். இதற்கான முழு விவரங்களை அறிய இணைய தள முகவரி : http://www.pmujjwalayojana.com/ ஆகும்.


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.