Skip to main content

மின் இணைப்பு பெறுவது எப்படி?

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

மனிதன் தான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளில் மின்சாரம் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்தது. ஏனெனில் கனிணி முதல் உயர்தர சிகிச்சை வரை மின்சாரம் தேவையானது . எனவே தான் அனைத்து வீடுகளிலும் 2020 க்குள் மின்சாரம் வசதியை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

eb connection



மின்சார சட்டம் - 2003 ல் உற்பத்தி விநியோகம் , ஒழுங்குமுறை ஆகியவற்றைப் பற்றிய அதிகாரங்களையும் , விதிகளையும் விளக்குகிறது. வீட்டு மற்றும் வணிக மின் இணைப்பு பெற , அதற்கான பிரத்யேக படிவத்தை (படிவம்-1) இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து , மின் துறை அலுவலகப் பிரிவில் கொடுக்க வேண்டும்.  உரிமையாளர் இல்லாமல் மின் இணைப்பை பெற விரும்புபவர்கள் , உரிமையாளர்களிடம் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புதல் கடிதம் கொடுக்க மறுத்தாலோ , உரிமையாளர் இல்லாமல் இருந்தாலோ , மனுதாரர் அதற்கென சட்டப்பூர்வமான சுவீகாரச் சான்றுடன் , படிவம் - 6 மற்றும் ஈட்டுறுதி ஒப்பந்தத்துடன் (Indemnity Bond) , இரண்டு மடங்கு செக்யூரிட்டி டெபாசிட் பணத்தையும் செலுத்த வேண்டும். படிவத்தை நேரிலோ (அல்லது) தபாலிலோ  கொடுத்தவுடன் , அதற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய கட்டிடங்களுக்கு சான்றளிக்கப்பட்ட மின் ஒப்பந்ததாரர் மூலமாக ஒயரிங் வேலைகளை , முடித்தவுடன் , உங்கள் பகுதிக்கான உதவிப்பொறியாளரை அணுகி , மேற்கொண்டு மின் இணைப்பைப் பெறலாம்.  மின் இணைப்பு ஒரு முனை மின் இணைப்பு (Sigle Phase) மற்றும் மூன்று முனை மின் இணைப்பு (Three Phase)  என இரு வகையாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

தற்காலிக மின் இணைப்பு :

குடியிருப்பு வீடுகள் , வணிக வளாகங்கள் , தொழிற்சாலைகள் மற்றும் விழாக்காலங்களில் தற்காலிக மின் இணைப்பு பெற விரும்பும் ஒருவர் , குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தற்காலிக மின் இணைப்பைப் பெறலாம்.

 

eb connection



குறைத்தீர்ப்பு :

ஒவ்வொரு வாரமும் பிரதி திங்கள்கிழமை , மக்கள் குறைத்தீர்க்கும் நாள் என வைக்கப்பட்டு குறைகள் அப்பகுதி கண்காணிப்பு பொறியாளர் முன்பு விசாரிக்கப்படும். கண்காணிப்பு பொறியாளர் நுகர்வோர் குறைத்தீர்ப்பின் அமைப்பின் தலைவராவார்.அதன் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மின் இணைப்பு சமந்தப்பட்ட குறைகளை மனுவாக அளித்து தீர்வை பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் மின்சார சட்டம் - 2003 படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ( Tamilnadu Electricity Regulatory Commission ) மற்றும் மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. மின் நுகர்வோர் தங்கள் குறைகளை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அணுகி உடனடியாக தீர்வை பெற்றுக்கொள்ளலாம். இதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றம் இரண்டும் சென்னையில் உள்ளது. இதற்கான முகவரி : 19-A , ருக்மணி லட்சுமிபதி சாலை , எழும்பூர் , சென்னை -600008 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. மின் இணைப்பு தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் இந்த அலுவலகத்தை அணுகி தீர்வை பெற்றுக்கொள்ளலாம். 

நுகர்வோர்களுக்கு மின் இணைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஒழுங்குமுறை ஆணையத்தையோ (அல்லது) குறைத்தீர்க்கும் மன்றத்தையோ அணுகி இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
1.புதிய சேவை மின் இணைப்பு , கூடுதல் சுமை , தற்காலிக இணைப்பு , இணைப்பு சேவை மாற்றம் , விலைப்பட்டியல் போன்ற கோரிக்கைகளை நிராகரித்தால் ஒரு நாள் தாமதத்திற்கு ரூபாய் 100 முதல் அதிகபட்சம் ரூபாய் 1000 வரை மின் நுகர்வோர்கள் இழப்பீடாக பெற முடியும்.
2. மின் அளவி மாற்றித்தராமல் இருந்தால் ஒரு நாளுக்கு ரூபாய் 100 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1000 வரை இழப்பீடாக பெறலாம்.
3. மின் அழுத்த மாறுபாடுகள் மற்றும் அதன் மீதான புகார்கள் கவனிக்கப்படவில்லையென்றால் ரூபாய் 250யை இழப்பீடாக பெறலாம்.
4.நுகர்வோரின் புகார்கள் கவனிக்கப்படவில்லையென்றால் , ஒரு நாளைக்கு ரூபாய் 25 முதல் அதிகபட்சம் ரூபாய் 250 வரை மின் நுகர்வோர்கள் இழப்பீடாக பெறலாம்.

மின் இணைப்பை இணையதள வழியில் விண்ணப்பிப்பது எப்படி ?

தமிழநாடு அரசு மின்சார வாரியம் எளிதாக பொதுமக்கள் மின் இணைப்பை பெறும் வகையில் இணையதள மின் இணைப்பு தொடர்பாக விண்ணப்பிக்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான இணைய தள முகவரி (Tamilnadu Generation and Distribution Corporation Limited )  : http://www.tangedco.gov.in/ ஆகும் .மின் இணைப்பு தொடர்பான நுகர்வோர்கள் தங்கள் புகாரை இணையதளம் மூலம் அனுப்பலாம். இதற்கான இணையதள முகவரி : https://www.tnebnet.org/awp/login ஆகும். மேலும் இதே இணையதளத்தைப் பயன்படுத்தி "Mobile Number யை" பதிவு செய்யலாம் மற்றும் மின் கட்டணத்தை செலுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலி (TANGEDCO) ஆகும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தங்கள் மின் இணைப்பு எந்த வகை சார்ந்தது என்பதை இதே இணையதளம் மூலம் அறியலாம்.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.