Skip to main content

ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமம் பெறுவது தலையாய கடமையாகும். இதை வாகனங்களை ஓட்டும் நபர்கள் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் .ஒவ்வொரு வரும் வாகனங்களை இயக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் பயணம் இனிய பயணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

ஓட்டுநர் உரிமத்தை பெறுவது எப்படி ?
மோட்டார் வாகன சட்டம் - 1988 - ன் படி ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

பழகுநர் உரிமம் (LLR) :
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் , வாகனத்தை ஓட்டி பழகுவதற்கு பழகுநர் உரிமம் வேண்டும்.
1. 50CC - க்கு உட்பட்ட அல்லது கியர் இல்லாத இரு சக்கர வாகனத்திற்கு பழகுநர் உரிமம் பெற 16 
    வயதைக் கடந்திருக்க வேண்டும்.
2.கியர் உள்ள இரு சக்கர வாகனம்  மற்றும் இலகு ரக வாகனம் (Light Motor Vehicle) பழகுநர் உரிமம்
  பெற 18 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
3.போக்குவரத்து வாகனங்களுக்கான பழகுநர் உரிமம் பெற 20 வயதை கடந்திருக்க வேண்டும்.
4.பழகுநர் உரிமம் பெற சமந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

தேவையான படிவங்கள் : 

படிவம் -1 , படிவம் -2 மற்றும் படிவம் - 14 (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக பெறபவர்களுக்கு) .

படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
1. இருப்பிட சான்று : 
 (பின்வரும் ஏதேனும் ஒன்று ) ,குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , ஆதார்     அடையாள அட்டை , LIC பாலிசி , மின் கட்டண அட்டை , தொலைபேசி ரசீது , அரசு அல்லது பிற   சம்பள ரசீது , பள்ளி சான்றிதழ் , பிறப்பு சான்றிதழ் , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று     வாக்குமூலம்.

2.வயது சான்று :
பிறப்பு சான்று , LIC பாலிசி , பள்ளிச்சான்று , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று பெற்ற வாக்குமுலம் , அரசு மருத்துவமனை சான்றிதழ் .

3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
 விண்ணப்பத்தாரர் உரிமம் வழங்கும் அதிகாரியின் முன் சென்று அன்றே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம் :
பழகுநர் உரிமம் பெற்ற நபர் , அது பெற்ற நாளில் இருந்து 30 நாட்கள் முடிவடைந்த பின் , அடுத்த 6 மாத காலத்துக்குள் FORM - 4 அல்லது FORM - 5 ( ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மூலம் பெறுபவர்களுக்கு ) பூர்த்திச்செய்து ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
 

driving license 1



ஓட்டுநர் உரிமம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :


1.பழகுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணங்கள்.
3.பிறர் வாகனங்கள் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.

ஓட்டுநர் உரிமம் பெற கட்டணம் :
ஓட்டுநர் உரிமம் (Laminated Type) பெற கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

சேவை கட்டணம் :
1.தனி வாகனங்களுக்கு : ரூபாய் 50.
2. போக்குவரத்து வாகனங்களுக்கு : ரூபாய் 100.

கூடுதல் உரிமம் மேற்குறிப்பு (Endorsement ) 
சில வகை வாகனங்கள் மட்டும் வைத்துள்ளவர்கள் , மேலும் சில வகை வாகன ஓட்டும் உரிமம் கூடுதல் உரிம மேற்குறிப்பு பெறலாம். 

போக்குவரத்து வாகன உரிமம் பெற தேவையான ஆவணங்கள் : 

படிவம் - 8 ஐ பூர்த்து செய்து , அதனுடன் பின்வரும் ஆவணங்களையும் இணைக்க வேண்டும். 

1. ஓட்டுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணம்  , பிறர் வாகனம் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
4. பொதுப்பணி வில்லை ( Public Service Badge ).
கட்டணம் - ரூபாய் 215 மற்றும் சேவைக்கட்டணம் - ரூபாய் 50.
போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் , பொதுப்பணி வில்லை கட்டாயம் பெற வேண்டும். பொதுப்பணி வில்லை பெற விரும்புபவர்கள் , 20 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.மேலும் உரிமம் வழங்கும் அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

கனரக வாகன உரிமம் பெறத்தேவையான ஆவணங்கள் : 

FORM - LTVA , FROM - I & Pa - வை பூர்த்திச்செய்து , அவற்றுடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.ஓட்டுநர் உரிமம்.
2.மருத்துவ சான்றிதழ்.
3.முதல் உதவி சான்றிதழ்.
இதற்கான கட்டணம் - ரூபாய் 215.

அபாயகரமான வாகன ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு :

அபாயகரமான மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்ட , அதற்கான சிறப்பு ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு பெற வேண்டும். அதற்காக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1.போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம்.
2.I.R.T (indian Road Transport) (அல்லது) அஙகீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்.
3. கோரிக்கை மனு கட்டணம் ரூபாய் - 250.

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி : 

ஒரு வெளிநாட்டவரோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியரோ , வெளிநாட்டில் அவர் பெற்ற ஓட்டுநர் உரிமத்தை வைத்து , இந்தியாவில் எந்த வாகனங்களையும் ஓட்ட முடியாது. ஆனால் அவர் சேர்ந்த நாடானது 1949- ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்த நாடாக இருந்தால் மட்டும் , அவர் இந்தியாவில் குறிப்பிட்ட வாகனங்களை மட்டும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி காலம் முடியுறும் தேதி வரை ஓட்டலாம். இந்தியாவில் பெறும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி , ஓராண்டு காலம் வரை செல்லும் . இதே போல் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதியானது. வெளிநாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியருக்கோ வழங்கப்படமாட்டாது. பிற நாடுகளுக்கு அடிக்கடி செல்வோர் , அங்குள்ள வாகனங்களை ஓட்ட பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை இங்கேயே பெறலாம். அதற்கு ஓட்டுநர் உரிமம் ஏற்கெனவே பெற்றவர்கள் , வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகிப்பெறலாம். 

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி பெற தேவையான ஆவணங்கள் :

1.படிவம் - IDPL 1 - யை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
2. ஓட்டுநர் உரிமம்.
3. பாஸ்போர்ட் .
4. விசா .
5.பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூபாய். 500
சேவைக்கட்டணம் - ரூபாய் - 500.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் :
ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த ஒருவர், (ஓட்டுநர் உரிமம் பெற்றவர்) நேரில் ஆஜராகி மறுபரிச்சோதனை  செய்ய வேண்டும்.

புதுப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
படிவம் - 9 , படிவம் - 1 , படிவம் - 1a -வை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.ஓட்டுநர் உரிமம்.
2.வயது சான்றிதழ்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூ 20 (Laminated Type).புதுப்பித்தல் கட்டணம் (ஒவ்வொரு ஆண்டுக்கும்)ரூ 10.

ஓட்டுநர் உரிமம் நகல் (Duplicate Licence) : 

ஓட்டுநர் உரிமம் காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ மனுதாரர் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.  

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1.ஓட்டுநர் உரிமம்.
2. காவல்நிலைய சான்றிதழ் (FIR COPY).
3.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இதற்கான கட்டணம் ரூபாய் - 215. 

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய :
ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்வதற்கு , கோரிக்கை மனுவுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.ஓட்டுநர் உரிமம்.
2.முகவரி சான்று.
இதற்கான கட்டணம் : ரூபாய். 200 மற்றும் சேவைக்கட்டணம் - ரூ.50. 

வாகனப்பதிவு: 
பெரும்பாலும் , வாகன விற்பனையாளர்களே தங்கள் ஏஜென்டுகள் மூலம் வாகனத்தைப் பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் கடனுதவி பெற்று வாகனம் வாங்குபவர்கள் , கடன் கட்டி முடித்த பின் வங்கி அல்லது பைனான்ஸ் தடையில்லா சான்று பெற்று (NOC) , பதிவு சான்றிதழ் , இன்சூரன்ஸ் பாலிசியுடன் படிவம் - 35ஐ அதிகாரியிடம் சமர்பித்து  , பதிவு சான்றிதழில் அடமான நீக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

வாகனம் விற்பனை : 

வாகனம் விற்பனை செய்யும் போது அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் போது , பதிவு சான்றிதழின் பதவு எண் , இயந்திர எண் , அடித்தள எண் உள்ளிட்டவை வாகனத்தில் ஒரு முறை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் படிவம் - 29 மற்றும் படிவம் - 30 ஐ பூர்த்திச்செய்து , அதில் விற்பவரின் கையொப்பத்துடன்  சமர்பித்து , உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஓட்டுநர் உரிமத்தை தொழில்நுட்ப வசதியுடன் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வழங்கி வருகிறது. மேலும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை இணையதள வழியில் அறியலாம். இதற்கான இணையதள முகவரி : https://parivahan.gov.in/parivahan/en/content/driving-licence-0 ஆகும் . அதே போல் ஓட்டுநர் உரிமம் (LICENCE STATUS) தொடர்பான விவரங்கள் அறிய இணையதள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=101 மற்றும் வாகன விவரங்கள் (RC STATUS) அறிய இணைய தள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=102 ஆகும்.


பி .சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தாமதப்படுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை தான் உருவாகும்' - போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்  

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'If we keep delaying, the problem will arise here again' - Transport Workers' Union interviewed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று  தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.