Skip to main content

பாஸ்போர்ட்டை இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ள விமான டிக்கெட் இருந்தால் போதும். ஆனால் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள "பாஸ்போர்ட்"  (Passport) கட்டாயம் தேவை என்பது அனைவரும் அறிந்தது. இந்த பாஸ்போர்ட்டை எவ்வாறு விண்ணப்பிப்பது? எங்கு செல்வது ? என மக்களின் சிலருக்கு தெரியவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் "பாஸ்போர்ட்" நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதற்கான
அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ளது . 

 

passport seva

தமிழகத்தில் "பாஸ்போர்ட்" அலுவலகங்கள் எங்கு உள்ளது.
1.திருச்சி
2.கோயம்புத்தூர்
3.சென்னை
 

மத்திய அரசு அனைத்து மாநில மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் "பாஸ்போர்ட் கேந்திரா சேவா  அலுவலகம்" துவக்கியுள்ளது.  இதன்படி சேலம் , ராசிபுரம் , ஈரோடு உள்ளிட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் கேந்திரா சேவா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் கோயம்புத்தூரில் உள்ள  தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கீழ் செயல்பட்டு வருகிறது.
 

passport


 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதள வசதிகள் :
1.Ordinary Passport.
2. Diplomatic / Official Passport.
3. Police Clearance Certificate.
4. Identity Certificate.
5. Surrender Certificate.
6. Background Verification for GEP.
7. LOC Permit.

உள்ளிட்டவை மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "பாஸ்போர்ட் சேவா" இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வரிசையில் இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பாஸ்போர்ட் "ORDINARY PASSPORT" ஆகும். 
 

passport

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. ஆதார் அட்டை அசல் ( பாஸ்போர்ட் விண்ணப்பிப்போரின் பெயர் , பிறந்த தேதி , முகவரி , தந்தை பெயர் மற்றும் தாய் பெயர் சரியாக இருக்க வேண்டும்) இதில் தகவல்கள் சரியாக இல்லையென்றால் ( பிறந்த தேதிக்காக - பான் கார்டு , 10th , 12, Degree Mark sheet உள்ளிட்டவை பயன்படுத்தலாம்) அடையாள அட்டையில் நிரந்தர முகவரி சரியாக இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலரை அணுகி இருப்பிட சான்றிதழ் பெறலாம்.

2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 (Passport Size photo)

3. விண்ணப்பிப்போரின் அருகில் உள்ள வீடுகளின் வசிப்போரின் பெயர் மற்றும் முகவரி , தொலைப்பேசி எண் கட்டாயம் தேவை. இதே போல் இரண்டு வீடுகளில் தகவல்கள் வேண்டும்.
 

passport

பாஸ்போர்ட் (Passport) விண்ணப்பிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் .

1. விண்ணப்பத்தாரரின் வயது 15க்குள் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை (Normal) ஆக இருந்தால் கட்டணம் ரூபாய் 1000 ஆகும். இல்லையெனில் பாஸ்போர்ட் உடனடியாக வேண்டுமென்றால் (தட்கல்)  முறையில் விண்ணப்பிக்கலாம் . இதற்கான கட்டணம் ரூபாய் 3,000 ஆகும். இந்த முறை கட்டணம் அதிகம். ஆனால் விண்ணப்பித்த ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் பெறலாம்.

2. விண்ணப்பத்தாரர்களின் வயது 18க்கும் மேல் இருந்தால் மற்றும் பாஸ்போர்ட் பக்கங்கள் 36 எனில் கட்டணம் ரூபாய் 1500 ஆகும் . பாஸ்போர்ட் பக்கங்கள் 60 எனில் கட்டணம் ரூபாய் 2000 ஆகும். இது (Normal) முறையில் விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் ஆகும்.

3.தட்கல் முறையில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் பக்கங்கள் 36 எனில் கட்டணம் ரூபாய் 3500 ஆகும். பாஸ்போர்ட் பக்கங்கள் 60 எனில் கட்டணம் ரூபாய் 4000 ஆகும். இந்த இரண்டு முறைகளையும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றால் போல் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
 

passport

பாஸ்போர்ட் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது ?

தேசிய மையமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளின் (Debit card ,Credit Card, Net Banking) மூலம் பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தை இணையதள வழியில் எளிமையாக செலுத்தலாம்.

"பாஸ்போர்ட்"விண்ணப்பிப்பது எப்படி?

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink ஆகும். இந்த இணையதளம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். இந்த இணையதளத்தில் தங்களுக்கென்று தனி கணக்கை தொடங்க வேண்டும். அதன் பிறகு "USER NAME" மற்றும் "PASSWORD" உருவாக்க முடியும். அதனை தொடர்ந்து பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரரின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் , முகவரிக்கான சான்றிதழ் நகல் எடுக்கப்பட்டு பிறகு விண்ணப்பத்தாரரிடம் கையெழுத்து பெறப்பட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் அருகில் உள்ள மாவட்ட தலைமை பாஸ்போர்ட் அலுவலக பெயரை குறிப்பிட்டு நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும். இதற்கு முன் பாஸ்போர்ட் அலுவலகத்தில் எந்த தேதியில் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்பதை விண்ணப்பத்தாரரே தேர்வு செய்யலாம்.

அந்த தேதியில் "Appointment" உள்ளதா? இல்லையா? என்பதை இணைய தள முகவரி :

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/online/apptAvailStatus சென்று அறியலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு "FILE NO" அல்லது "Application No" வரும். இதன் பின் பாஸ்போர்ட் விண்ணப்பித்தற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்த பின் விண்ணப்பித்த "APPOINTMENT" தேதி மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் அசல் மற்றும் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலர்கள் சரிப்பார்த்து "Electronic Signature" மற்றும் "புகைப்படம்" பிடிப்பார்கள். அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து விடலாம். பாஸ்போர்ட் தொடர்பான  விண்ணப்ப நிலையை பாஸ்போர்ட் அலுவலகம் குறுந்தகவல் மூலம் அனுப்பும் . அப்படி வரவில்லையெனில் இணையதள முகவரி : https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/statusTracker/trackStatusInpNew சென்று பாஸ்போர்ட் நிலையை அறியலாம். அதே போல் சில நாட்கள் கழித்து சமந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தாரருக்கு அழைப்பு வரும். பின் சென்று காவல்துறை அதிகாரி விண்ணப்பத்தாரரின் மேல் எந்த வித வழக்கும் இல்லை. இவருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என உறுதிப்படுத்தி விண்ணப்பதாரரிடம் கையெழுத்தை பெறுவர். பிறகு சில நாட்கள் கழித்து தபால் அலுவலர் மூலம் விண்ணப்பதாரரின் இல்லத்திற்கே சென்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.

அப்போது விண்ணப்பதாரரின் கையெழுத்திட்டால் மட்டுமே தபால்காரர் பாஸ்போர்ட் வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாஸ்போர்ட் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. எனவே படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைவரும் ஆதார் அட்டை ஒன்று இருந்தால் போதும் எளிமையான முறையில் மக்கள் பாஸ்போர்ட் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த "பாஸ்போர்ட்" அட்டையின் நிறம் "கருமை நீல நிறம்" Dark Blue ஆகும். இதற்கான விண்ணப்பத்தை மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்கான மொபைல் செயலி முகவரி : "mPassport Seva" ஆகும். இதை கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


 

பி .சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.