Skip to main content

குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீவிர விசாரணையில் மிஸ்ரா!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
mishra 1


தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ள குரங்கணி கொழுக்குமலையில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 39 பேர் காட்டு தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து பற்றி விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை ஆணையராக நியமித்தார். அதன் அடிப்படையில் நேற்று தேனி வந்த மிஸ்ரா, இன்று வனத்துரை மற்றும் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் சம்பவத்தன்று தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு வந்த குரங்கணியை சேர்ந்த சில இளைஞகர்களையும் அழைத்து கொண்டு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குரங்கணி கொழுக்குமலைக்கு சென்றார்.
 

mishra 2


அங்கு சம்பவம் நடந்த ஒத்தமரத்தடி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் ஒன்பது பேர் எப்படி இறந்தார்கள் என்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் கேட்டார். அதுபோல் அந்த பள்ளத்தில் விழுந்து தீ காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ற கோணத்திலும் சம்பவ இடத்திலேயே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டே விசாரணை நடத்தினர் மிஸ்ரா.

அதன் பின் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களிம், ட்ரெக்கிங் வந்தவர்கள் எத்தனை பேர்? முதல் நாள் இரவு எங்கு தங்கினார்கள்? மறுநாள் எத்தனை மணிக்கு புறப்பட்டனர்? அப்பொழுது வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதா? அல்லது அவர்கள் பாதி வழியில் செல்லும் போது காட்டு தீயில் மாட்டிக் கொண்டார்களா? என்று கேள்விகளை எழுப்பினார்.
 

mishra 3


அதற்கு சில தொழிலாளர்கள் அவர்கள் போய் கொண்டு இருக்கும் போது கீழ் இருந்து புகை வந்து கொண்டு தான் இருந்தது அது தெரிந்தும் அவர்கள் ஜாலியாக பேசி சாப்பிட்டு கொண்டும் போட்டோவுடன், செல்பியும் எடுத்து கொண்டு இருந்தனர். அதன் பிறகு தான் அவர்கள் தீயில் சிக்கி கொண்ட விஷயமே தெரியும் என்றனர்.

அதை எல்லாம் உன்னிப்பாக கேட்டவர், தொடந்து கொழுக்குமலை வனப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தியவாரே இன்று இரவு கொழுக்குமலை எஸ்டேட்டில் தங்கி இருந்து விட்டு நாளை மலையை விட்டு இறங்கி குரங்கணி மக்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ... அச்சத்தில் கொடைக்கானல்!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Wildfire burning about the 6th day ... Kodaikanal in fear!

 

கொடைக்கானலில் 6 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ அங்கிருப்போருக்கு அச்சுறுத்தலைத் தந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளைப்பாறை, பெருமாள் மலை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 ஏக்கர்  வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏற்கனவே மச்சூர் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளைப்பாறை பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. அதேபோல் கூக்கால் கிராமத்தில் உள்ள பழம்புத்தூர் வனப்பகுதியிலும் காட்டுத்தீயின் பரவல் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத்தீ பரவுதல் என்பது எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. தீத்தடுப்பு கோடுகள், எதிர்த்தீ அமைத்தும் வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் ஊருக்குள் இடப்பெயர்வு செய்வது அதிகரிக்கும் என கொடைக்கானல் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.   

 

 

Next Story

கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்குள் வேகமாக பரவும் காட்டுத் தீ!

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

kodaikanal forest area incident forest officers water

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனபகுதிக்குள் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

 

பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ, இன்று காலை வரை பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத் தீயால் வான்முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. 

 

தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுத் தீயை தீத்தடுப்பு எல்லைகளை அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகளை அமைத்தும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால், அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.