Skip to main content

ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?- விரிவான தகவல்!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

How to attend a medical consultation online? - Detailed information!

 

ஆன்லைன் மூலம் முதன்முறையாக நடைபெறவிருக்கும் பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 

 

அதன்படி, ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துக் கொள்வது எப்படி? என்று விரிவாகப் பார்ப்போம்!

 

tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, முதலில் கடவுச்சொல்லை மாற்றி அமைக்க, ரீசெட் பாஸ்வேர்டு என்பதை கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது கொடுத்த கைபேசி எண்ணுக்கு 'OTP' வரும். அந்த 'OTP'-ஐ உள்ளீட்டு, புதிய கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

 

அடுத்ததாக, Login செய்து விண்ணப்பிக்கும் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரி (அல்லது) விண்ணப்ப எண் (அல்லது) விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய 'Login ID'-யை - பயன்படுத்தலாம். இவற்றை பயன்படுத்தி 'Login' செய்யும் போது, புதிதாக உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையலாம். உள்ளே சென்றவுடன் இடதுபுறம் செல்ப் டீடெய்ல்ஸ் என்ற தலைப்பின் கீழ் பெயர், பாலினம், சமூகம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

 

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான மையங்களைத் தேர்வு செய்யலாம். தங்களுக்கு அருகில் உள்ள மூன்று மையங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். 

 

அதன்பின், கலந்தாய்வு கட்டணமாக, ரூபாய் 500- ஐ பாரத ஸ்டேட் வங்கி (அல்லது) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் மூலம் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் கட்டி முடித்தவுடன், பதிவு செய்யும் நடைமுறை முடிவுக்கு வரும். 

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.