வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் உயிரிழப்பு... வேலூரில் சோகம்!

house wall collapses in Vellore

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பிவழிகின்றன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துவருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக எதிர்பாராத விபத்து சம்பவங்களும் நடைபெறுகின்றன. நேற்று (18.11.2021) கடலூரில் மழை காரணமாகத் தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று நேற்று காலை பெய்த கனமழை காரணமாக இடிந்தது. மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

collapses Vellore weather
இதையும் படியுங்கள்
Subscribe