Skip to main content

வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள்... விவேக் லட்சியத்தை நிறைவேற்றும் இளைஞர்கள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

திரைப்பட நடிகராக மட்டுமின்றி சூழலியல் ஆர்வலராக தமிழக இளைஞர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் நடிகர் விவேக். 'கிரீன் கலாம்' என்ற திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட இளைஞர்களையும் மாணவர்களையும் அழைத்தார். தானாக முன்வந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டியும் உள்ளார். இப்படி தமிழக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தரின் லட்சியமான 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேறும் முன்பே திடீரென அவரை மரணம் தழுவிக் கொண்டது.

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

நடிகர் விவேக்கின் மரணத்தை எதிர்பார்க்காத இளைஞர்கள் அவர் மண்ணுக்குள் போவதற்குள் அவரது 'கிரீன் கலாம்' லட்சியத்தை நிறைவேற்ற முனைந்தனர். யாரும் சொல்லாமலேயே தானாக முன்வந்து தமிழகம் முழுவது தங்கள் வீடு, தோட்டம், அலுவலகம், பொது இடங்கள் என கிடைத்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆவணம் கிராமத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் 'கிரீன் கலாம்' 'கிரீன் விவேக்' என்ற புதிய திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு முதல்கட்டமாக சமூக ஆர்வலர் அப்பாஸ் தலைமையிலான இளைஞர்கள் சுமார் 350 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் கார், வேன், ஓட்டுநர்கள் விவேக் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார்கள். கொத்தமங்கலத்தில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். புதுக்கோட்டையில் பெண்கள் குழந்தைகளும் மரக்கன்றுகளை நட்டனர்.

 

 House to house saplings ... Young people fulfilling Vivek's ambition!

 

இந்த ஒரே நாளிலேயே விவேக் லட்சியத்தின் பாதியை கடந்துவிட்டனர். இன்னும் சில நாட்களில் அவரது 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு 'கிரீன் விவேக்' திட்டமும் நிறைவேற்றப்படும். விவேக் உயிரோடு இருக்கும்போது அடையமுடியாத லட்சியத்தை அவரது ரசிகர்கள், அவரால் கவரப்பட்ட இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.