Skip to main content

ஓசூர் அருகே ரவுடியை கொன்று சடலம் புதைப்பு! மாமூல் கேட்டு மிரட்டியதால் விபரீதம்!!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

Hosur Rowdy passes away police arrested two and investigating

 


ஓசூர் அருகே, மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியைக் கொன்று சடலத்தைப் புதைத்த வாலிபர்களைக் காவல்துறை பிடித்து விசாரித்துவருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35), ரவுடி. இவர் மீது ஓசூர் காவல் நிலையம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, எப்பகோடி ஆகிய காவல் நிலையங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. 

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு, மஞ்சுநாத் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து காவல்துறையினர் சுறுசுறுப்படைந்தனர். ஓசூர் டிஎஸ்பி (பொறுப்பு) சங்கர் உள்ளிட்ட காவல்துறையினர், மஞ்சுநாத் மாயமான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகிய இருவரும்தான் கடைசியாக மஞ்சுநாத்திடம் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. 

 

சந்தேகத்தின்பேரில் அவர்களைப் பிடித்துவந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இவர்களிடம் மஞ்சுநாத் அடிக்கடி மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த இருவரும் மஞ்சுநாத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். 

 

அவர்கள் போட்ட திட்டத்தின்படியே, கடந்த 7 நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு மஞ்சுநாத்தை சந்தீப்பின் வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். அவர்களின் நோக்கம் புரியாமல் அங்கே சென்ற மஞ்சுநாத்தை அவர்கள், கண்களில் மிளகாய்ப்பொடி தூவி நிலைகுலைய வைத்துள்ளனர். பின்னர் கட்டை, இரும்பு உருளையால் சரமாரியாக தாக்கிக் கொன்றுள்ளனர்.

 

சந்தேகம் வராமல் இருக்க, சடலத்தை உளிவீரனப்பள்ளி அருகே ஏரிப் பகுதியில் புதைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல ஊருக்குள் சுற்றிவந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர், வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 1) சடலத்தைத் தோண்டி எடுத்தனர். அங்கேயே உடற்கூராய்வும் செய்யப்பட்டது.

 

பிடிபட்ட சேத்தன், சந்தீப் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? உண்மையில் மாமூல் கேட்ட தகராறில்தான் கொலை நடந்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

பட்டாசு கிடங்கில் தீ விபத்து; சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Fireworks warehouse fire; People are afraid of surrounding smoke

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் என்ற பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vck ad

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு விபத்து காரணமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.