Skip to main content

செல்ஃபோனில் விடிய விடிய மனைவி அரட்டை: எவ்வளவோ சொல்லியும் கேட்கல... கணவன் வெறிச்செயல்... போலீசார் அதிர்ச்சி!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

hosur husband and wife police investigation

 

ஓசூரில், செல்ஃபோனில் விடிய விடிய அரட்டை அடித்த மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

இவருடைய மனைவி சிந்துஜா (27). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓசூர் நாராயண நகர் அடுக்குமாடி குயிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

 

கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. மேலும், மனைவியின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் எழுந்தது. அக்., 13- ஆம் தேதியன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

 

ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். சம்பவத்திற்குப் பிறகு மணிகண்டனே ஹட்கோ காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வுக்காக சடலம், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணிகண்டனையும் கைது செய்தனர்.

 

காவல்துறையில் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில மாதங்களாகவே சிந்துஜா யாரோ சில ஆண்களுடன் அடிக்கடி செல்ஃபோனில் பேசி வந்தார். மனைவிக்கு சிலருடன் தவறான தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இனிமேல் யாரிடமும் செல்ஃபோனில் பேசக்கூடாது என்று சிந்துஜாவுக்கு தடை விதித்தேன். அப்போதும் அவர் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து விடிய விடிய செல்ஃபோனில் பலருடன் அரட்டை அடித்து வந்தார்.

 

Ad

 

மேலும், என்னையும், என் பெற்றோரையும் மரியாதைக் குறைவாகப் பேசினார். இந்த நிலையில்தான், எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. என் மனைவி இனியும் உயிருடன் இருந்தால் எனக்கு மன உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்,'' என தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.