Skip to main content

நீர் வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை நீடிப்பு!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.  கர்நாடகா மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்கு கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

 

hogenakal Increase in water flow,  Extend the Gift Operating Barrier


இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஜூலை 24ம் தேதி காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7500 கன அடியாக இருந்த நீர் வரத்து ஜூலை 25ம் தேதி காலை வினாடிக்கு 8000 கன அடியாக அதிகரித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கல்லில் கடந்த 23ம் தேதி முதல் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று நாள்களாக பரிசல்கள் இயக்கப்படாததால், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

 

hogenakal Increase in water flow,  Extend the Gift Operating Barrier


இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணைக்கு இரு நாள்களுக்கு முன்பு வினாடிக்கு 7000 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பைக் காட்டிலும் நீர் வரத்து உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. ஜூலை 24ம் தேதி 40.15 அடியாக இருந்த நீர்மட்டம், ஜூலை 25ம் தேதி 41.15 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.