Skip to main content

ஓசூரில் அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை; அடுத்தடுத்த கொலைகளால் பொதுமக்கள் கிலி! 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

hosur criminal passed away police in investigation

 

ஓசூரில் வட்டித்தொழில் செய்து வந்த ரவுடி மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மூன்று கொலை சம்பவங்களால் ஓசூர் நகர மக்கள் கிலியில் உறைந்து போயுள்ளனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் உதயகுமார் (32). கார் ஓட்டுநர். அத்துடன், வட்டித் தொழிலும் செய்து வந்தார். பிப். 28ம் தேதி இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், உதயகுமாரை திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பலியானார். அவருடைய தலையில் சில வெட்டுகள் ஆழமாக இறங்கி இருந்தது. 

 

இதுகுறித்து மத்திகிரி காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட உதயகுமாருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020ல் நாகராஜ் என்பவரை வெட்டிக் கொல்ல முயன்றதாக அவர் மீது மத்திகிரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. 

 

அந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 8ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர் உள்ளூரைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அவரை முன்னிறுத்தி வட்டித்தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

 

கொலையான நபர் எந்த டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் அவரை டாஸ்மாக் கடையில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், வரும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகளின் உருவங்கள் பதிந்துள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர். 

 

இந்தத் தகவல்கள் அடிப்படையில் மத்திகிரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஒரு வாரத்தில் 3 கொலை: 

 

ஓசூரில் கடந்த ஒரு வாரத்தில் உதயகுமார் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பெங்களூருவுக்கு அருகில் ஓசூர் மாநகரம் இருப்பதால், கொலையாளிகள் குற்றங்களை நிகழ்த்திவிட்டு எளிதில் பெங்களூருவுக்கு தப்பிச்சென்று பதுங்கி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கனரக தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேலை தேடி ஓசூருக்கு படையெடுக்கின்றனர். இதனால்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பகுதி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொழில் நகரம் என்பதால் கோடீஸ்வரர்களும் பணப்புழக்கமும் அதிகம். அதனால் குற்றங்களும் சகஜமாக அரங்கேறி வருகின்றன. அடுத்தடுத்த கொலைகளால் ஓசூர் நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.