Skip to main content

விடுதி சிறுமிகளிடம் தாளாளர் சில்மிஷம்! போக்சோ சட்டத்தில் கைது !

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

திருச்சி சமயபுரம் விடுதியில் உள்ள மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லுத்ரன் சர்ச் பள்ளியின் தாளாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி சமயபுரம் அடுத்த சிறுகனூர் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் பள்ளிக்கூடத்தில் இலவசமாக ஆரம்பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இதில் 53 பள்ளி மாணவிகள் படிக்கிறார்கள். இந்த வளாகத்தில் உள்ளயே மாணவிகள் தங்கும் விடுதியில் தங்க வைத்து அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள். 

 

nn

 

இந்த நிலையில் தான் பள்ளியின் தாளாளரான தர்மராஜன் பாலியல் அத்துமீறலில் புகார் கொடுத்து பெற்றோர்களின் முற்றுகை போராட்டத்தால் பள்ளிக்கு வந்த சமூக பாதுகாப்பு நலத்திட்ட அதிகாரிகளின் விசாரணையில் ஈடுபட்டனர். 

 

nn

 

கடந்த 40 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு தாளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியரான தர்மராஜன் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் வறுமையில் உள்ள சிறுமிகளை தனிமையில் அழைத்து இனிப்பு வழங்குவது கதைகள் கூறுவது போல அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

 

nn

 

இதில் 9 வகுப்பு, எட்டாம் வகுப்பு, 7வகுப்பு மாணவிகள் உட்ப 5 மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்துள்ளனர். 

 

தர்மராஜனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். 

 

மாணவிகள் தங்கும் விடுதியில் இருந்த அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். காப்பகம் இழுத்து பூட்டப்பட்டது. இதனால் 53 பேர் படித்து வந்த அரசு உதவி பெறும் லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் உண்டு உறைவிட பள்ளிக்கூடம், ஒரு மாணவ ,மாணவிகளும் இல்லாமல் காலியானது..!

 

nn

 

மாணவிகள் சிலரிடம் இது குறித்து விசாரித்த போது.. அவரு வயசான தாத்தா அவருக்கு கால்களில் புண்கள் இருக்கிறது. அவரு நடக்கமுடியாமல் சிரமப்படுவர். அவர் வெளியே நடக்கணும் என்றால் எங்களை போன்ற மாணவிகள் தான் அழைத்து செல்வார்கள். அப்போது தான் அவர் தப்பான இடங்களில் கை மேலே படும் என்றும். இதானால் மாணவிகள் புகார் கொடுத்தோம் என்றார்கள். 

 

வயதான காலத்தில் பள்ளி சிறுமிகளிடம் சிலுமிஷம் செய்த தர்மராஜ் மீது கடுமையான கோவத்தில் உள்ளனர் அந்த பகுதி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.